ஊவா மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் விரைவில் – அநுர பிரியதர்ஷன யாப்பா

anura_priyadarshana_yapa.jpgஊவா மற்றும் தென் மாகாண சபைகளின் பதவிக்காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைய உள்ளதாகவும் அவ்வாறு முடிவுற்றவுடன் அவற்றுக்கான தேர்தலை உடன் நடத்த அரசாங்கம் ஆலோசித்து வருவதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

வடக்கிலும் மாகாணசபைத் தேர்தல் மட்டுமன்றி ஊள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலும் நடத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு எதிர்காலம் குறித்த ஒரு நம்பிக்கை ஏற்படும் நிலை நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் நடந்து முடிந்த தேர்தல்களில் அரசாங்கம் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோன்று எதிர்வரும் தேர்தல்களிலும் அரசாங்கம் மகத்தான வெற்றியீட்டும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *