படையினர் எல்ரிரிஈயினரின் கடைசி பகுதியை அண்மித்துள்ளனர் – பாதுகாப்பு அமைச்சு

navy.jpgஇரட்டை வாய்கல் தெற்கு பகுதியில் 7 சதுரக்க கி.மீ.பரப்புக்குள் எல்ரிரிஈயினரை முடக்கியுள்ள இராணுவத்தின் 58வது டிவிசன் படையினர் எல்ரிரிஈயினர் பதுங்கியுள்ள இடங்களை அண்மித்துள்ளதாகவும் எல்ரிரிஈயினர் கடைசி சண்டைக்கு எதிர்பார்த்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

58வது டிவிசன் படையினருக்கு பக்கமாக படை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 53வது டிவிசன் படையினர் முள்ளிவாய்கல் மேற்கு பகுதியில் எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 15,000 -20,000 வரையான சிவிலியன்களை மீட்கும் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரையமுள்ளிவாய்கல் பகுதியில் கண்ணிவெடிகளையும் அகற்றிக்கொன்டு பயங்கரவாதிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் நுளைந்துள்ளனர்.இதன்போது 15 எல்ரிரிஈயினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதா பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *