அடுத்த நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் : தேசம்

Thesam Logoஅண்மையில் தாயகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் ஓர் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தில் அக்கறையுடைய ஒவ்வொருவரையும் இந்த சடுதியான அரசியல் இராணுவச் சுனாமி பாதித்துள்ளது. பல்வேறு கசப்புணர்வுகளையும் வலிகளையும் கடந்து அடுத்த கட்டம் நோக்கி நாம் பயணிக்க  வேண்டியுள்ளோம். நாம் கடந்து வந்த பாதைகள் மிகக் கரடுமுரடானதாகவும் மிக மோசமானதாகவும் இருந்தள்ளது. ஆதலால் எமது அடுத்த நகர்வு பற்றி மிகவும் கவனமாகச் சிந்தித்துச் செயற்பட வேண்டியுள்ளது.

அந்த வகையில் பன்மைத்துவ அரசியல் பின்னணியுடைய புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தனது அடுத்தகட்ட நகர்வை ஏற்படுத்தவதற்கு முன் தங்களிடையே ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தவது அவசியமாகும். பரஸ்பரம் புரிந்துணர்வுடன் இக்கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு உங்களை அழைக்கின்றோம். இக்கலந்துரையாடலில் பங்கேற்று நிகழ்வை ஆரோக்கியம் உள்ளதாக்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

தேசம் சஞ்சிகை ஒரு பொது ஊடகம் என்ற வகையில், இன்றைய காலத்துடன் தொடர்புபட்ட விடயங்களை விவாதிப்பதற்கான ஒரு தளமாக இருக்கின்றது. அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் இக்கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு  பலரும் வலியுறுத்தியதால்  இந்த உரையாடலுக்கான தளத்தை ஏற்படுத்தித் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம்.

நீங்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்வதன் மூலம் கலந்துரையாடப்படும் விடயங்களை தவறவிடாது தொடர முடியும். மேலும் கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயங்களை மீண்டும் மீண்டும் பேசுவதையும் தவிர்க்க முடியும்.

இக்கலந்டதுரையாடல் ஆக்கபூர்வமானதாக அமைய உங்கள் அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம்.

இக்கலந்துரையாடல் ஒரு பொதுக் கூட்டம் அல்ல. அழைக்கப்படுபவர்களுக்கு மட்டுமாக மட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அழைப்பிதல் கிடைக்காதவர்கள் கலந்துகொள்ள விரும்பினால் கீழுள்ள தொடர்பிலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

காலம் :
21 யூன் 2009,  ஞாயிறு மாலை

தொடர்பு :
த ஜெயபாலன்: 07800 596 786     ரி கொன்ஸ்ரன்ரைன்:  0208 905 0452   ரி சோதிலிங்கம்  07846 322 369

இங்ஙனம்
தேசம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *