கப்பலை மூழ்கடிக்கும் பாரிய நீர்மூழ்கி வெடி குண்டுகள் இரண்டையும் அதனை ஏவும் கருவியொன்றையும் இராணுவத்தின் 8 ஆவது அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று தேடுதல் நடத்திய படையினர் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பாரிய குண்டுகளையும் ஏவியையும் மீட்டுள்ளனர்.
குண்டுகளை ஏவும் கருவி 28 அடி நீளமும் 5 அடி 10 அங்குல் சுற்றளவும் கொண்டது. நீர்மூழ்கி வெடி குண்டுகள் 26 அடி நீளமும் 5 அடி 07 அங்குல சுற்றளவும் கொண்டவை எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.