இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான புலிகள் படையினரிடம் சரண் : உதய நாணயக்கார

udaya_nanayakkara_brigediars.jpgஇது வரை 10000 அதிகமான விடுதலைப்புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.  இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பொலிசாருக்குக் கிடைக்க பெறும் தகவலைத் தொடர்ந்து விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து பல ஆயுதங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் 22 ஆயிரம் பேர் பாதுகாப்பு படைகளில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்திற்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள் நடந்த வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *