கண்ணிகள் அகற்றும் பணிக்கு 500 இந்திய இராணுவத்தினர்

sarath-pon-eka.jpgவடக்கு, கிழக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு உதவ 500 பேர் கொண்ட இந்திய இராணுவக் குழு வெகுவிரைவில் இலங்கை வரவுள்ளதாக புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன் சேகா தெரிவித்தார்.

மக்களை வெகுவிரைவில் மீளக் குடியமர்த்தும் நோக்குடன் எமது பாதுகாப்புப் படைப்பிரிவினரும் வெளிநாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் அதேசமயம் இவர்களுடன் இணைந்து சேவையாற்றும் வகையிலேயே 500 இந்திய இராணுவ வீரர்களை அனுப்ப இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பிரதான பாதுகாப்பு அதிகாரியாக நேற்று கடமைகளை பொறுப்பேற்ற ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும் போது மேலும் தகவல் தருகையில்:

புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடிகளுக்கு மத்தியிலேயே எமது பாதுகாப்புப் படைவீரர்கள் களமுனையில் முன்னேறிச் சென்றனர். இதன் காரணமாக பலர் உயிர் நீத்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

வடக்கின் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட அதேசமயம் கிழக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எமது படை வீரர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.  இவற்றில் அதிகமாகவும், வேகமாகவும் இராணுவத்தினரே மீட்டெடுத்தனர்.

கண்ணிவெடி அகற்றும் பணி என்பது மிகவும் இலகுவானதும், சுருக்கமாக செய்யக்கூடியதுமான ஒரு காரியமல்ல. காட்டுப் பகுதிகளிலும், சதுப்பு நிலப் பரப்பிலும் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை மிக இலகுவாக அகற்ற முடியாது. எனினும் வெகுவிரைவில் அகற்றத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை முழுமையாக அகற்றப்பட்ட பின்னர் மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *