சங்கரி ஐயா, தயவு செய்து அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்! : த ஜெயபாலன்

Anandasangaree V._._._._._.
”சங்கரி ஐயாவுக்கு எனது பகிரங்க 75வது பிறந்தநாள் வாழ்த்து மடல்”  என்ற தலைப்பில் யூன் 15 2008ல் எழுதப்பட்ட கட்டுரை. கட்டுரையின் சாரம்சத்தின் அடிப்படையில் அதன் தலைப்பு மாற்றப்பட்டு இங்கு மீள் பதிவு செய்யப்படுகிறது.
._._._._._.

சங்கரி ஐயா வணக்கம்.

இன்று யூன் 15 (2008), உங்கள் 75வது பிறந்த தினத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இங்கு என் குடும்பத்தில் எல்லோரும் நலம். உங்களுக்கும் அவ்வாறே என்று நம்புகிறேன். ஐயா நீங்கள் கடிதம் எழுதுவதில் படுபிசியாக இருப்பது மட்டுமில்லாமல் என்னைப் போன்ற வாசகர்களையும் படுபிசியாக வைத்திருக்கிறீர்கள். நிற்க.

ஐயா 14 மே 1976 அன்று நீங்களெல்லாம் வட்டுக்கோட்டையில் கூடி ஒரு தீர்மானம் போட்டியல், அது உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். இதுவொரு பகிரங்கக் கடிதம் என்ற படியால மற்றவைக்கும் விளங்குவதற்காக ”….. வரலாற்று உண்மைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு ….. தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்த்தப்பட்ட படியாலும் சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் எல்லாம் சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தை தூண்டி வளர்த்து தமது அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்களுக்குப் பாதகமாக பயன்படுத்திய படியால் இலங்கைவால் தமிழ் மக்கள் சிங்களவரில் இருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்று இத்தால் பிரகடனப்படுத்துகிறது. ….. இத்தீவில் உள்ள தமிழீழ நாட்டினத்தின் நிலையான வாழ்வை பாதுகாப்பதற்கு, ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திர இறைமையுள்ள மதச் சார்பற்ற சோசலிச தமிழீழ அரசை மீள்வித்து புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகி விட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.”’ இது தான் ஐயா நீங்களும் உங்கள் கட்சியும் எடுத்த தீர்மானம்.

ஐயா நீங்கள் ”இது ஒரு ரக்ரிகல் மூவ் (tactical move)” என்றும் ”இது ஒரு நியாயமான தீர்வாக உங்களுக்கு படவில்லை” என்றும் தேசம் சஞ்சிகைக்கு 2006 நவம்பரில் அளித்த பேட்டியில் சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் உங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட தம்பிக்கு இன்னும் இந்த விசயம் புரியவில்லை. அல்லது புரிந்துகொண்டாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரம் உயிர்கள் இழக்கப்பட்டுவிட்டது, இவ்வளவிற்கும் பிறகு எப்படி மக்கள் முன் வந்து அதை ஒத்துக்கொள்வது.

1980க்களின் நடுப்பகுதியில் பிரபாகரனிடம் இந்திய உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்த சந்திரன், ‘தமிழீழத்தை கைவிடலாமே’ என்று கேட்டுள்ளார். அதற்கு பிரபாகரன் ‘என்னை நம்பி 120 பெடியள் உயிரை விட்டுள்ளார்கள்’ என்று பதில் சொல்லியதாக, அண்மையில் லண்டன் வந்திருந்த சந்திரன் தெரிவித்திருந்தார். இன்று தமிழீழ விடுதலைப் புலிகளில் மட்டும் 20,000க்கும் அதிகமான போராளிகள் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பல மடங்கு மக்கள் உயிரிழந்து உள்ளனர். உள்நாட்டு யுத்தம் தொடர்கிறது.

1976ல் இந்த தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்ட மாநாட்டை சுற்றியுள்ள மதில்சுவர்களில் ‘தமிழ் முதலாளி தமிழீழம் கேட்கிறான்’ என்பது போன்ற கூட்டணியின் தமிழீழக் கோசத்திற்கு எதிரான சுவரொட்டிகளை சீனசார்பு கொம்யூனிஸ்ட் கட்சி ஒட்டியது. தமிழீழம் சாத்தியமா? இல்லையா? என்ற வாதம் யாழ்ப்பாணமெங்கும் நடத்தப்பட்டது. ஆனால் கூட்டணியின் தமிழீழ கோசத்தை எதிர்த்தவர்கள் மிகச் சிறுபான்மையினரான இடதுசாரிகள். அவர்களது அரசியல் எதிர்வு கூறல் இன்று யதார்த்தமாகிவிட்டது.

ஐயா உங்களுடையதும் உங்கள் கட்சியினதும் அரசியல் தவறுகளுக்கு தமிழ் மக்கள் செலுத்துகின்ற விலை மிக மிக அதிகம். ”நாங்களோ போய் அடிபடச் சொன்னாங்கள், டக்ளஸ் தேவானந்தாவைப் போல் எங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை” என்று நீங்கள் சொல்லலாம். ஓரளவுக்கு உண்மைதான். ஆனால் உங்கள் முகம் முழுக்க இரத்தக்கறை இருப்பதை நீங்கள் காணவில்லை. தமிழீழக் கோசம் போட்டு உங்களால் உசுப்பி விடப்பட்ட ஆயிரம், ஆயிரம் இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள நாடி, நரம்புகளைக் கீறி இரத்தத் திலகம் இட்டார்களே. அதில் எனது சொந்த சகோதரனும் ஒருவன். 25 வயதிலேயே அவனும் கொல்லப்பட்டு 20 வருடங்கள் கடந்துவிட்டது. அந்த இளைஞர்களின் இரத்தக் கறைகளை நான் உங்கள் முகத்தினில் காண்கிறேன் ஐயா.

ஐயா உங்களுடைய அரசியல் வாழ்க்கை 1950க்களில் இடதுசாரி அரசியலிலேயே ஆரம்பித்தது. 1965ல் தேர்தலில் தோல்வியடையும் வரை நீங்கள் இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிர்கள். பிறகு கொங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 1970ல் பாராளுமன்றம் சென்றீர்கள் பிற்பாடு சமஸ்டிக்கட்சியில் 1972ல் இணைந்து கொண்டிர்கள். அது பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாக தமிழீழம் கேட்டது வரலாறு. இன்று வளர்த்த கிடாய் மார்பினில் பாய்ந்தது போல் உங்களதும் கூட்டணியினதும் நிலை.

சங்கரி ஐயா, அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்ட’ நீஙகள் இன்று செய்கின்ற அரசியல் என்ன? நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்ளாதது உள்முரண்பாடு. ஒரு விபத்து. சம்பந்தன் ஐயாவின் சதியும். அதற்கு அப்பால் கொள்கை வேறுபாடு எதுவும் இருக்க நியாயம்மில்லை. எழுபதுக்களின் நடுப்பகுதியில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கிய இளைஞர் படையணி அடியாள் குழுக்கள் தான், நீங்கள் இன்று கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் டக்ளஸ், பிரபாகரன் மற்றும் கொல்லப்பட்ட ஏனைய இளைஞர் தலைவர்கள். யாழப்பாண மாநகரசபையை அபிவிருத்தி செய்த அல்பேட் துரையப்பாவை கூட்டணி தனது சொந்த அரசியல் நலனுக்காக மக்களின் பெயரால் பழிவாங்கியது. இது இன்றும் தொடர்கிறது. இன்னும் தொடரும் நிலையே உள்ளது.

ஐயா கூட்டணி துவக்கு தூக்காத புலி. புலி துவக்கு தூக்கிய கூட்டணி என்றதை மறந்திடாதைங்கோ.

‘காங்கரஸ் காரன் சட்டை போடாமல் இருந்தாலும் இருப்பானே தவிர பதவி இல்லாமல் இருக்க மாட்டான்’ என்பது இந்திய அரசியல் வழக்கு. நீங்கள் ஆடும் அரசியல் சதுரங்கத்தை அரசியலில் அரிவரி தெரிந்தவர்களே புரிந்துகொள்வார்கள். தென்னையில ஏறியாச்சு தேங்காயை (சமஸ்டி) பிடுங்கிறதா? இல்லையா? என்று நீங்கள் விட்ட றீல், பிறகு கிழக்கு தேர்தலில் முக்கூட்டணி. ஆளுநர் பதவிக்கு ஆசையில்லை என்று அறிக்கை விடுற மாதிரி விடுறதும், மற்றையவை கேக்கிற மாதிரி கேக்கிறதும், பிறகு எடுக்கிற மாதிரி எடுக்கிறதும் என்னையா விளையாட்டு. இன்றைக்கு என்ன ஆச்சு உங்கள் அரசியல்?

டக்ளஸ்க்கு கடிதம் எழுதி இருக்கிறீங்கள் ஐயா. டக்ளசை அம்பலப்படுத்துவது சரி. அது அதுக்கு என்று ஒரு நேரகாலம் இருக்கு. உங்களுக்கு பதவி வழங்கப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் எழுதிய கடிதம் அதில் இருந்த உண்மைகளையும் வலு இல்லாமல் செய்துவிட்டது. ஐயா சின்ன வயதில பள்ளிக் கூடத்தில் பெடியல் வாங்குக்கு சண்டை பிடித்து ரீச்சரிட்டை கோள்மூட்டுவாங்கள் தெரியுமோ? அதுக்கும் நீங்கள் செய்ததுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

ஐயா தமிழ் சமூகத்தில் தற்கொலை வீதம் ஒப்பீட்டளவில் சராசரியிலும் அதிகம். பரீட்சையில் தோல்வி, காதல் தோல்வி, குடும்பத்தில் தோல்வி என்று பல தோல்விகளுக்காக தமிழர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் ஒரு கடித்தையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்வார். நான் அறிந்தவரை யாரும் அரசியல் தோல்விக்காக தற்கொலை செய்ததில்லை. ஆனால் நீங்கள் எழுதிய கடிதங்கள் உங்கள் அரசியல் வாழ்வின் தற்கொலையாகவே இருக்கிறது.

Anandasangaree_UNESCO_Prizeபெரும்பாலும் ஒருவர் தனது வாழ்வின் உச்சநிலையில் இருக்கும் போதே ஒய்வுபெற விரும்புவார். அப்படிச் செய்வதன் மூலம் அவர்களது அந்த வரலாறு அந்த உச்சநிலையை உறுதியாக பதிவு செய்துகொள்ளும். அப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கும் இரு ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. யுனஸ்கோ விருது வழங்கப்பட்டதும் அதனைப் பெற்றுக்கொண்டு நீங்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்திருக்க வேண்டும். அரசியல் சாராது சமாதானத்திற்கு மட்டும் குரல் கொடுப்பவராக போராடியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள், பலர் கூறியும் அந்த யோசனையைத் தட்டிக்கழித்துவிட்டிர்கள். இன்று நீங்களே உங்கள் மீது சேற்றை வாரியிறைத்து இருக்கிறீர்கள்.

இறுதியாக ஐயா, தயவு செய்து நீங்கள் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் நல்லது.

ஐயா, மீண்டும் உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
த ஜெயபாலன்

15 யூன் 2008

 இக்கட்டுரை தொடர்பான முன்னைய பதிவுகளுக்கு :

சங்கரி ஐயாவுக்கு எனது 75வது ஆண்டு பகிரங்க பிறந்தநாள் வாழ்த்து மடல் : த ஜெயபாலன் : http://thesamnet.co.uk/?p=1431

அண்ணன் ஜெயபாலனிற்கு கூட்டணித் தம்பி எழுதும் பதில் : எஸ் அரவிந்தன் (தவிகூ லண்டன் கிளை) : http://thesamnet.co.uk/?p=1491

ஆனந்தசங்கரி – டக்ளஸ் மோதல் புலிகள் மீண்டும் பலம்பெறுவதற்கே உதவும் : குரு : http://thesamnet.co.uk/?p=1430

”வேற்றுமைக்குள் ஒற்றுமைதான் தேவையானது.” அண்ணன் சங்கரிக்கு தம்பி டக்ளஸின் அன்புக் கடிதம் : http://thesamnet.co.uk/?p=1368

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பற்றி ஆனந்தசங்கரி ஜனாதிபதி மகிந்தவுக்கு எழுதிய கடிதங்கள் : http://thesamnet.co.uk/?p=1272

ஆனந்தசங்கரி ஜயா, ஆளுனர் பதவிக்கு அலைவது மெய்யா? : ஆர் புதியவன் : http://thesamnet.co.uk/?p=578

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத கூட்டணியினர் வானம் ஏறி வைகுண்டம் போகினமாம்…….” ரி கொன்ஸ்ரன்ரைன் : http://thesamnet.co.uk/?p=176

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 Comments

  • senthil
    senthil

    புலியில்லாத இந்த தேர்தல் தோல்வியுடனாவது தனது அரசியலுக்கு ஓய்வுகொடுத்து அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி யுனெஸ்கோ பணத்தில் தனது இறுதிக்காலத்தை கழிக்கவும் அல்லது யுனெஸ்கோ பணத்தில் வவுனியாவில் பரிதவிக்கும் மக்களுக்கு உதவுங்கள். தமிழர் விடுதலை கூட்டணியையும் அரசிடம் அடகு வைக்காதையுங்கள். அல்லது வழமையான உங்களின் கட்சிவிட்டு கட்சிதாவும் கடந்த கால உங்களின் வரலாற்றினை இந்த 75வது வயதிலும் ஆசைப்படவேண்டாம். த.வி.கூட்டணியை புதிய சமுதாயத்திடம் அரசிடம் விலைபோகாதவர்களிடம் கொடுத்துவிட்டு தோல்வியை ஒப்புக்கொண்டு இனியாவது கடித அரசியலைநிறுத்தி ஏனையவர்களுக்கு வழிவிடுங்கள்.

    Reply
  • senthil
    senthil

    தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி 424 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.; பாவம் ஜயா சங்கரி, வெளிநாட்டு அமைச்சுப் பதவிக்கே சிபார்சு செய்யப்பட்ட சங்கரி ஜயாவுக்கு மாநகர சபை உறுப்பினர் பதவிதான் கிடைத்துள்ளது. இனி வட மாகாண சபையின் முதலமைச்சு கனவும் பறிபோனது. ஒரு இந்திய ஆதரவாளருக்கு கிடைத்த மொத்த வாக்கு 424 மட்டுமே. இந்தியாவும் சரியான மக்கள் ஆதரவாளர்களை தேடவேண்டிய காலத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். சங்கரி மட்டுமல்ல…வரதரின் அணிக்கும் சேர்த்துதான் சொல்கிறேன். வெறும் 424!!

    Reply
  • Vannikkumaran
    Vannikkumaran

    1976 முதல் இலட்சக்கணக்கான தமிழரின் உயிர் அழிய காரணமாகி இன்றும் இந்திய இலங்கை அரசுகளின் கைப்பொம்மையாக இருந்து தமிழரின் ரணவேதனையை மீண்டும் மீண்டும் கிளறி விட ஆதரவு கொடுத்து சர்வதேச பார்வையை திசை திருப்பிய அறிக்கை மன்னன் சங்கரிக்கு சங்கார கோசமிடாமல் வாழ்துச் சொல்லும் தேசம் தன் பொலிவை தானே இழக்கப் போகிறதா? சங்கரிக்காக தன் மகிமையை தேசம் இழந்துவிடக் கூடாதே என்பதே என் அங்கலாய்ப்பு.

    அன்புடன் தேசம் நண்பர்
    வன்னிக் குமரன்

    Reply
  • மாயா
    மாயா

    வவுனியாவில் புளொட்டை வீழ்தப் போய் இனவாத புலி சார்ந்த கூட்டமைப்பை வெற்றி பெற வைத்தவர்கள் படு முட்டாள்கள். அது என்னவே புலிகளை மக்கள் விரும்புவது போன்ற நிலமையை காட்டுகிறது. இருந்தாலும் புலி எதிர்ப்பு கட்சிகளின் வாக்குகளைப் கூட்டிப் பார்த்தால் அது தவறு என புரியும். இருந்தாலும் வென்றவர்கள்தானே அங்கே பணி செய்யப் போகிறார்கள். இனி என்ன? தொடரும் அசம்பாவிதங்களை தொடர்ந்தும் எழுத வேண்டிய தலைவிதியை வாக்காளர்கள் செய்துள்ளார்கள். இது விதிதான்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இந்த விதியைத்தான் நானும் சிந்துத்துக் கொண்டிருக்கிறேன். ஏன் தமிழனை மட்டும் துரத்தித் துரத்தி கடித்துக் கொண்டிருக்கிறது. சுயநலம் மிக்கதென்பதாலா? முட்டாள்தனமான சமூகம் என்பதிலா?

    Reply
  • ssganendran
    ssganendran

    சிறந்த தலைப்பு ஆனாலும் சங்கரியாருக்கு எப்பவோ மக்கள் அரசியல் ஓய்வு கொடுத்தது ஜெயபாலனுக்கு தெரியாதுபோல

    Reply
  • je
    je

    இந்த விதியைத்தான் நானும் சிந்துத்துக் கொண்டிருக்கிறேன். ஏன் தமிழனை மட்டும் துரத்தித் துரத்தி கடித்துக் கொண்டிருக்கிறது. சுயநலம் மிக்கதென்பதாலா? முட்டாள்தனமான சமூகம் என்பதிலா?”

    மக்களின் உணர்வுகளோடு விளையாடினால் இப்படித்தான் நடக்கும். தமிழர்கள் கெளரவமான பிரஜைகளாக வாழ விரும்புவதையே வெளிப்படுத்தியுள்ளார்கள். அரசு உடனடியாக அவர்களுக்குரிய தீர்வை முன்வைக்க வேண்டும். இல்லையென்றால் மீண்டும் புலியின் வாயில் மக்கள் தள்ளப்படுவார்கள். ஆனால் மகிந்த அரசு புலியை திரும்பக் கொண்டு வர முடிவெடுத்துள்ளது.(தன்Nhடு இணைந்து தேர்தலில் நிற்குமாறு கட்சிகளை பலாத்காரம் செய்ததற்கு மக்களின் பதில் இதுதான்)

    Reply
  • BC
    BC

    //chandran.raja- சுயநலம் மிக்கதென்பதாலா? முட்டாள்தனமான சமூகம் என்பதிலா?//
    இவ்வளவுக்கு பிறகும் இப்படியென்றால் முட்டாள்தனமான சமூகம் தான்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பெரும்பாலான தமிழர்களின் தேசிய ஒற்றுமை என்பதை பயங்கரவாதம்தான் என நினைக்க வைத்ததாக எண்ண முடிகிறது? அந்தசிந்தனையிலிருந்து மீள இன்னும் 50 வருடமாவது ஆகும். அந்த அளவுக்கு இனவாத விதைகள் தமிழர் மனங்களில் தூவப்பட்டு விட்டது.

    சிங்கள தலைமைகள் இறங்கி வந்தாலும் , தமிழ் தலைமைகள் இறங்கிப் போகப் போவதில்லை. அதை இந்த தேர்தல் நன்கே உணர்த்தியுள்ளது.

    பயங்கரவாதத்தை அழித்தமையை ஏற்று மகிந்தவை அங்கீரிக்க தமிழர்கள் இன்னும் தயாராக இல்லை. யாழில் டக்ளஸ் தனித்து போட்டியிட்டிருந்தால் , இதை விட அதிக வாக்குகளை பெற்றிருப்பார். டக்ளஸது வீழ்ச்சிக்கு வெற்றிலையை சின்னமாக்கியதே காரணம்.

    இத் தேர்தலில் EPDP யும் மகிந்தவும் இரண்டு பெரும் தவறுகளை செய்தன. ஒன்று யாழில் EPDPயை வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வைத்தது. இரண்டாவது வவுனியாவில் புளொட்டுக்கு எதிராக EPDP யை களம் இறக்கியது. இதனால் யாழில், மக்கள் வாக்களிப்பதை தவிர்க்கும் நிலையையும் , வவுனியாவில் புலி சார்ந்த இனவாத கூட்டமைப்பு வெல்லும் நிலையையும் உருவாக்கியிருக்கிறார்கள். இது சமாதானத்தை விரும்புவோருக்கு பேரிடியாகவே இருக்கும். அவர்களுக்கும்தான்.

    இவற்றுக்கு அடிப்படைக் காரணம் , இன்றைய முகாம்களில் உள்ள மக்களது பிரச்சனையும் , அநியாயமான சந்தேக கைதுகளும் பலரை வேதனைக்குள் தள்ளியுள்ளதேயாகும். இங்கே பாதிப்புக்கு உள்ளாகியிருப்போர் , இந்த வாக்காளர்களது உறவுகளாகவோ அல்லது நண்பர்களாகவோ இருக்கிறார்கள். அல்லது தமிழர் என்ற உணர்வாகக் கூட இருக்கலாம். இந்த மனநிலையில் வாக்களிப்பது ஒரு கேடா என அலட்சியப்படுத்தியுள்ளார்கள். மீள் குடியமர்த்தல் பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாகும் வரை மக்கள் இவர்களை முழுமையாக நம்பப் போவதில்லை.

    மனித கைதுகளால் மட்டும் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது. மக்கள் மனதில் நம்பிக்கை ஒளியை ஊட்டுவதால்தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். அதுவே இன்றும் என்றும் தேவையாக இருக்கும். சமாதானம் குறித்து பேசுவதால் மட்டும் சமாதானம் வந்து விடாது. அதை செய்து காட்ட வேண்டும்.

    தவிர, முகாம்களில் உள்ளோரிடம் கருணா மற்றும் டக்ளஸ் ஆகியோரது ஆதரவாளர்கள் பெறும் கப்பம் மற்றும் அடாவடித்தனங்களும் தமிழரை மகிந்தவைக் கூட நம்ப மறுக்க வைத்துள்ளது. இதில் உச்சமாக முகாமலிருக்கும் ஏதிலிகளுக்கு உரிய பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுத்த கதை அவர்களை துடைத்து எறிந்தே விட்டது. இவர்கள் முதலில் திருந்த வேண்டும்.

    இந்த தேர்தல் முடிவுகள், அடுத்த ஜனாதிபதி தேர்தலை தள்ளி வைக்கச் செய்வதோடு , தவறுகளை சரி செய்யவும் வழி சமைக்கலாம். எல்லாம் நல்லதுக்கே. ஆனாலும் இது புலிகளுக்கான ஆதரவு சமிக்கை என யாரும் எடுத்துக் கொள்ளலாகாது. இது மக்களின் வேதனை தீரவில்லை என்பதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    துப்பாக்கிச் சத்தங்கள் கேட்காவிட்டாலும் , அரச பயங்கரவாத கொலைகள் நிற்கவில்லை. அவையும் நிற்கும் வரை மக்கள் யாரையும் நம்ப மாட்டார்கள்.

    Reply
  • R:V.விஷ்ணு
    R:V.விஷ்ணு

    உள்ளூராட்சிசபைத்தேர்தல் பலருக்கு பாடம் கட்பித்திருக்கிரத்து இதில் நாடில் காலத்தில் நிக்கிறவர்கள் தங்களை தாங்களாகவே திருத்திக்கொள்கிரார்களோ இல்லையோ புலம்பெயர் சங்கரி ஐயா ஆதரவாளர்களும் மாற்றுக்கட்சி ஆதரவாளர்களும் இப்போதாவத்து ஜதார்த்தத்தை புரிந்து கொண்டு திருந்தவேண்டும் இல்லையெனில் நாட்டிலிருக்கும் ஜனநாயகம் பேசும் குழுக்களை ஒன்றிணைத்து ஒழுங்கான ஒரு கட்சியை உருவாக செய்யவேண்டும் (என்னைப்பொறுத்தவரை இத்தனை வாக்கேடுத்தவர்கள் தங்களை கட்சி என்று சொல்லிக்கொள்வதை விட தங்களை தனிநபர் குழுக்கள் என்று சொல்லோக்கொல்வதே சரியாக இருக்கும் ) இல்லை எனில் இடத்தை முப்பது நாட்பது வருட அரசியல் வாழ்கையில் தங்களுக்கென (கட்சிக்கென ) உருப்படியாக ஒரு வாக்கு வங்கியை செமிக்கமுடியாதவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள் ஜெயபாலனின் பாணியில் சொல்வதானால் அரசியலிலிருந்து ஓய்வெடுங்கள் இனியாவது. இனித்தானே தமிக் குழுக்களின் ஆயுத அச்சிறுத்தல் இல்லை நிச்சயமாக புதியவர்கள் சாதரண மக்களிலிருந்து தோன்றுவார்கள் தோன்றுவார்கள் (நீங்கள் நினைப்பதைப்போல் ஆயுதக்குழுக்களின் பழைய போராளிகளில்லை). எத்தை காலத்துக்குத்தான் பொறுப்பது பொதுமக்கள் உங்களின் அறுவைகளை.

    Reply
  • katham
    katham

    ஆனந்தசங்கரி!
    நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சியும் ஏதோநினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் புலிகளின் அழிவின் பின்னர் நீங்கள் 1977 ல் பெற்ற வாக்குகளையும் ஆசனங்களையும் பெறலாம் என்று கனவு உலகில் சஞசரித்துக் கொண்டிருந்ததை அவதானித்தோம் இன்று உங்களுக்கு உண்மை புரிய வைக்கப்பட்டுள்ளது மக்கள் ஒன்றும் மந்தைகள் என்ற உங்கள் நினைப்புக்கு தகுந்த பாடம் புகட்டப்பட்டுள்ளது.

    சங்கரி ஜயா நீங்கள் உங்கள் திருகுதாளங்களை எல்லாம் இந்த உலகம் முழுவதும் போய் ஆடிவிட்டு தேவைப்பட்டபோது உங்கள் சலுகைகளக்காக சதிராடியும் விட்டு இப்போ வந்து உங்களுக்காக வட மாகாணத் தமிழர்கள் நீங்கள் அன்று கூட்டணி மேடைகளில் பேசிய பேச்சுக்களுக்காகவும் அதை நம்பி இன்று வரையிலும் மக்களும் உங்களுக்காக தவம் கிடந்து கொண்டிருக்கிறார்கள் அதுவும் பசி பட்டினி அவலம் சாவு இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு உங்கள் வரகைக்காக காத்திருந்தமாதிரி தேர்தலக்கு வந்தீரோ?

    ஜயா சங்கரி தயவு செய்து இனிமேல் நீங்கள் போன்றவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கி கிடைத்தகாசு பொதும் என்று நிம்மதியாக ஒருபக்கத்தில் இருங்கள் எம்மை நிம்மதியாக வாழவிடுங்கள்.

    Reply
  • x -tulf
    x -tulf

    ஜயா சங்கரி அவர்களே!
    நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சியினரம் நீங்கள் தமது கட்சித் தொண்டர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாயும் அப்படி புறம்தள்ளப்பட்ட இளைஞர்கள் ஈபிடிபி யில் சேர்ந்துள்ளதாயும் சொல்லிக் கொள்கிறார்கள் இது பற்றி முழுமையாக உங்கள் அபிப்பிராயங்களை முன்வைப்பீர்களா?

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    “…சுதந்திரமானதும், நீதியுமான தேர்தல் நடத்தப்பட வேண்டும்!
    “மிகப் பலம் கொண்ட அரசின் வேட்பாளர்களுடன் போட்டியிட்டு தோற்பதால் நான் எதையும் இழந்துவிடப் போவதில்லை. நாடுதான் என்னை இழக்கப் போகிறது” – ஆனந்தசங்கரி–
    http://anandasangary.com/?p=809

    Reply
  • ravana
    ravana

    சங்கரியின் அரசியல் தெரிந்தோர்க்கு சங்கரியின் அறம் பிழைத்தது குறித்து அதிசயப்பட நேர்ந்திருக்காது. இடதுசாரி இயக்கம் காங்கிரஸ் சமஸ்டிக்கட்சி பேரினவாத அரச ஆதரவு என்று பின்பக்கமாகவே நகர்ந்திருக்கிறது அது. இடதுசாரிக்கட்சியில் இருந்த ஒருவர் கட்சியின் தவறான போக்குகளுடன் முரண்படின் அதனை விட சரியான நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை.

    கூட்டணிக்குள் நிகழ்ந்தது தலைமைப் போட்டி. அவர் தன்னை ஆதரிக்கும்படி தமிழ்ச் செல்வனைக் கோர கிளிநொச்சியில் நாட்கணக்கில் காத்திருந்தார். ஆனால் புலிகளோ கிழக்குப் பிரதிநிதியாகிய ஜோசப் பரராஜசிங்கத்தை முன்னுக்குக் கொண்டு வரும் நோக்கில் சங்கரியைச் சந்திக்க மறுத்து விட்டனர். அதன் பிறகு தான் சங்கரிக்கு தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை பறிக்கப்படுவது தெரிய வந்தது. பல ஜனநாயக இயக்கங்களுக்குத் தெரிய வந்தது போல. மாற்றுக்கருத்துக்கள் குறித்து அக்கறை வந்தது பல மாற்றுக்கருத்தாளர்களுக்குத் தெரிய வந்தது போல. ஆக, அதில் சம்பந்தனின் சதி ஏதுமிருந்ததாக நான் அறியவில்லை. அப்படி ஏதுமிருப்பதாக ஜெயபாலன் விளக்கினால் தான் உண்டு.

    இந்த லட்சணத்தில், சங்கரியின் இன்றைய நிலைக்கு சங்கரி ஒரு காரணமென்றால் அவரை ஜனநாயகப் போராளியாக, மாற்றுக்கருத்தாளராக எடுத்துக் காட்டிய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தான் மறு காரணம். சங்கரியை பதவி விலகச் சொல்வதற்கு முன்னால் அவர்கள் செய்யவேண்டியது எவ்வளவோ உண்டு.

    Reply
  • மாயா
    மாயா

    சங்கரி போன்றவர்கள் தமது இணைப்புக்குள்ளேயே இணைக்கமில்லாதவர்கள். இதை முன்னமே எழுதிய போது அவர் திருந்தியுள்ளார் என தேசத்துில் சிலர் கருத்து சொன்னார்கள். இவர்கள் திருந்தினால் உலகமே திருந்திவிடும்.

    Reply
  • palli
    palli

    இதைதான் பல்லி பல பக்கத்தில் பல முறை சொன்னேன் யாரும் கேட்டால்தானே; ஜயா மட்டுமல்ல அரசியலில் இருந்து கடாய ஓய்வு எடுக்க வேண்டியவர்கள் பலர் கொழும்பை அலஙரிக்கின்றனர்: அதில் அய்யா முதலிடம் வகிக்கிறார்; தம்பி அஜ்ஜாவுக்கு இரண்டு வடையும் சுக்கு போட்ட ரீயும் பாஸல்; பூனை எலி பிடிப்பதும்; கோழி முட்டை போடுவதும், ஜயா கடிதம் எழுதுவதும் ஏழாவது உலக அதிசயமா என்ன.??
    கூத்தமைப்புடன் சில கூட்டமைப்புகள் சேர்ந்து மீண்டும் ஒரு கூதமைப்பு கட்டி வன்னியை வளைத்து போட பாடுபடுவதாக வன்னி செய்தி; அது பொய்யானால் மக்களுக்கு நல்லம்; நிஜம் எனில் அரசுக்கு இன்னொரு குழந்தை கிடைத்து விடும்;

    Reply