மிருகக் காட்சிசாலையைப் பார்வையிட சிறுவர்களுக்கு இலவச அனுமதி!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நாளை தேசிய மிருகக் காட்சிசாலையை சிறுவர்கள் இலவசமாகப் பார்வையிடலாம் என மிருகக் காட்சிசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். 12 வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும் என்றும் இது தவிர சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய வைபவம் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

நாளை காலை 9.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *