சகல பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் நேற்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் உடனடியாக சம்பள உயர்வு வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தாய் நாட்டை பயங்கரவாதப் பிடியில் இருந்து மீட்டு அனைத்து மக்களும் ஐக்கிய இலங்கையினுள் ஒன்றாக வாழும் நிலையை உருவாக்கிய படை வீரர்களை கெளரவிக்கும் வகையிலே சம்பள உயர்வு வழங்க முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
கிளிநொச்சி, முழங்காவில் பகுதிக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு படைத்தளங்களில் பணிபுரியும் சுமார் 4 ஆயிரம் படை வீரர்கள் முன்னிலையில் உரையாற்றியபோதே ஜனாதிபதி படைவீரர்களுக்கான சம்பள அதிகரிப்பு பற்றிய தகவலைத் தெரிவித்தார்.
« பாடசாலை சீருடை விநியோகம் நாளை ஆரம்பம். முதல் தொகுதி யாழ்குடாவுக்கு | Home | எவ்வித விசாரணையுமின்றி ஜெனரல் பொன்சேகா நாடு திரும்பினார் »
Related posts:
- Will be added soon here...
