மட்டக் களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வரும் ரூபாவதி கேதீஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு இந்த நியமனத்தை வழங்கியுள்ளது.
ரூபாவதி கேதீஸ்வரன் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணை யாளராகவும் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபராகவும் சுனாமி வேலைத்திட்டத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியதுடன் தற்போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றுகின்றார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள இவர் எதிர்வரும் திங்கட்கிழமை அதற்கான கடமையை பொறுப்பேற்கவுள்ளார்
« “ஒபரேஷன் என்ரபே”யை விடவும் கே.பியை கொண்டுவந்தது சாதனை | Home | சவுதி அரேபிய பெண்ணை கொன்ற இந்தியருக்கு மரண தண்டனை »
Related posts:
- Will be added soon here...
