கடைசியாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட மூலங்கள் :
  • பிரபாகர ஜாதி வெறியிஸம்!: துரை நரையன். (166)
  • உண்ணாவிரதத்தில் மக்டோனால்ட் சாப்பிடவில்லை என்பதை பரமேஸ்வரன் நீதிமன்றத்தில் நிரூபித்தார். (14)
  • சமூகமாற்றத்தை ஏற்படுத்தாமல் சமூகத்தைப் பிரதிபலித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழகமல்ல பெரிய பள்ளிக்கூடமே! : த ஜெயபாலன் (97)
  • ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு - எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை (2)
  • திருகோணமலை மாவட்டமும் வட கிழக்கு மாகாண அரசும் - பே பரமானந்தம் (6)
  • யாழ்.  மாவட்ட மக்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருந்தோரது பணம் பத்து ஆண்டுகளுக்கு மேல் உரிமை கோரப்படாது மத்திய வங்கியின் உடைமையாக்கப்பட்டிருப்பின் அதனை மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணஜீவா தெரிவித்தார்.

    இது தொடர்பாக ஜனாதிபதி, மத்திய வங்கி ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் அவர் கூறினார். யாழ்ப்பாணம், புலோலியில் மக்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தைத் திறந்து வைத்த அவர், அங்கு இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறினார்.

    வன்னிப் பிராந்தியத்தில் மக்கள் வங்கிக் கிளைகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தவர்களின் ஆவணங்கள் தொலைந்திருந்தாலும், இருக்கும் ஆவணங்களுக்கமைய திருப்பி வழங்கப்படுவதுடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் வங்கிக் கிளைகளில் அடகு வைத்திருந்த நகை களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் கூறினார்.

    மக்கள் வங்கி யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 49 பேருக்கு முகாமைத்துவ உதவியாளர்கள் பதவிகளை வழங்கியுள்ளது. மேலும் இருபத்தைந்து பேருக்கு புதிதாக நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.






    Related posts:
    • Will be added soon here...
    உங்கள் கருத்து

    Name (required)

    Email (required)

    Website

    உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
    English பாமினி உச்சரிப்பு