இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம் பெற்றதாக அமெரிக்கா விடுத்துள்ள குற்றச்சாட்டு அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள குழு அதன் அறிக்கையை அடுத்த மாத (டிசம்பர்) இறுதியளவில் ஜனாதிபதியிடம் கையளிக்கும் என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அமெரிக்காவின் மேற்படி குற்றச்சாட்டு அறிக்கை பத்திரிகை செய்திகள் மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் சேகரித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் சமரசிங்க கூறினார்.
அமெரிக்க காங்கிரஸ் இந்த அறிக்கையை இலங்கை அராசங்கத்திடம் கையளித்ததை யடுத்து அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.