பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்க அவுஸ்திரேலியாவிலிருந்து மருந்து

influenza-a.jpgநாட்டில் தற்போது ஏ.எச்1.என்1 என்ற பன்றிக்காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதால் அதற்கான மருந்தை அவுஸ்திரேலியாவிடமிருந்து பெறுவதற்கு சுகாதார அமைச்சு அவசர நடவடிக்கை எடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்த மருந்தை அவுஸ்திரேலியாவிடமிருந்து பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த நோயினால் பலர் உயிரிழந்துள்ளதுடன் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநேரம்,  இந்த நோய் பல்வேறு மாவட்டங்களிலும் வேகமாகப் பரவியும் வருவதால் இதற்கான இந்த மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கு வந்து சேரவுள்ளதாக சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மருந்து இங்கு வந்ததும் நாட்டில் உள்ள சகல ஆஸ்பத்திரிகளுக்கும் அவை விநியோகிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *