பயங்கர வாதம் ஒழிக்கப்பட்டு நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளதையடுத்து மே தினம் உழைக்கும் வர்க்கத்தினால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனையிட்டு கொழும்பு உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதான கட்சிகளும் தொழிற் சங்கங்களும் ஊர்வலங்களையும் ஏற்பாடு செய்துள்ளன.
ஐ. ம. சு. முன்னணியின் பிரதான மேதினக் கூட்டம் கொழும்பு மாநகர சபை முன்றலில் இடம்பெறுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு தலைமைதாங்குவார். பெருமளவிலான தொழிலாளர்கள் நாடு முழுவதிலுமிருந்து கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப் படுகிறது. ஐ. தே. க. இம்முறை சமய நிகழ்வுகளை மாத்திரமே ஏற்பாடு செய்துள்ளது.
இடதுசாரி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இடதுசாரி முன்னணி ஆகியன நாரஹென் பிட்டி சாலிகா மைதானத்தில் நடைபெறும். இ. தொ. கா. அதன், மே தினக் கூட்டத்தை தலவாக்கலையில் நடத்துகிறது. ஜே. வி. பி. பொரள்ள கம்பல் பூங்காவில் அதன் கூட்டத்தை நடத்துகிறது.