வவுனியா வடக்கில் 80 வீத மீள் குடியேற்றம் பூர்த்தி

வவுனியா வடக்கு, நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 80 சதவீதமான மக்கள் மீள்குடியமர்ந்துள்ளனர். இரண்டு கிராமசேவையாளர் பிரிவில் மாத்திரமே மீள்குடியேற்றம் நடைபெறவேண்டியுள்ள தென வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி பி. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். நெடுங்கேணி அரசினர் வைத்தியசாலை திறக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகளும் நடைபெறுகின்றன. நெடுங்கேணி பிரதேச செயலகம் உரிய இடத்தில் இயங்கவைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள தெனவும் அரச அதிபர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *