முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!

Musical_Instrumentபுனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 125 பேர் உட்பட 495 பேர் நேற்று (May 17 2010) அவர்களது பெற்றோர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இவர்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஏ.சந்திரசிறி, அமைச்சர் கே.என. டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாவட்ட படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேஸ், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.விக்னராஜா, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ரி.நீக்கிலாப்பிள்ளை, உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வு மதத் தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமானது. வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்வு, பனர்வாழ்வளிக்கபட்டு இரத்மலானை இந்தக் கல்லாரியில் தற்போது கல்வி கற்று வரும் மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகள் என்பனவும் இதன் போது இடம் பெற்றன.  இரத்மலானை இந்துக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள முன்னால் குழந்தைப் போராளிகளுக்கு லிற்றில் எய்ட் இசைக் கருவிகளை வழங்கி அவர்களுக்கு இசை பயிற்றுவிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தது.  லிற்றில் எய்ட் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது. http://littleaid.org.uk/ and http://littleaid.org.uk/gallery/musical-instruments-to-ambepusse-24th-july-2009

பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட 495பேர் அவர்களின் பெற்றொர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்களில் விடுதலைப்புலிகளினால் பலவந்தமாக போரில் இணைக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 198 பேரும், பல்கலைக்கழக மாணவர்கள் 72 பேரும், கனரக வாகன சாரதிப் பயிற்சி பெற்றிருந்த 100 பேரும் மற்றும், முன்னாள் போராளிகள் 125 பேரும் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *