யாழ்ப்பாண அரசாங்க அதிபர் கே.கணேஸ் பதவியிலிருந்த ஓய்வு பெறுவதையடுத்து யாழ்ப்பாணத்தின் புதிய அரசாங்க அதிபராக முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நாளை வியாழக்கிழமை பதவியேற்கிறார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவிருந்த நா.வேதநாயகன் பதவியேற்கிறார்.
யாழ். அரசாங்க அதிபர் திரு கே.கணேஸ் 50 வருடகால அரச சேiயிலிருந்து இன்று ஓய்வு பெறும் நிலையிலேயே நாளை அப்பதவியை முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் எற்கிறார். போர் நடைபெற்ற காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த நா.வேதநாயகன் முல்லை அரச அதிபராக பதவியேற்கிறார்.
போர் முடிவடைந்ததன் பின்னர் கடந்த யுலை மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ந.வேதநாயகன் அவர்களை நீதிமன்றம் இம்மாதம் 17ம் திகதி குற்றமற்றவர் என விடுதலை செய்தமை குறிப்பித்தக்கது.
Rohan
நாகலிங்கம் வேதநாயகன் ஒரு நல்ல மனிதர். வாழ்த்துக்கள்.