காலி டெஸ்ட்: 2ம் நாள் ஆட்டம் மழையால் தடை

muralitharan.jpgஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கப்டன் சங்கக்கார, பரனவிதனா சதமடித்து கைகொடுக்க, இலங்கை அணி முதல் இன்னிங்சில் வலுவான நிலையில் உள்ளது. இலங்கை – இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் காலியில் நேற்று துவங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை கப்டன் சங்கக்கார துடுப்பெடுத்தாட தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு டில்ஷான், பரனவிதனா சுமாரான துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 55 ஓட்டங்கள் சேர்த்த போது அபிமன்யூ மிதுன் வேகத்தில் தில்ஷான் (25) அவுட்டானார். பின்னர் இணைந்த கப்டன் சங்கக்கார பரனவிதனா ஜோடி இந்திய பந்து வீச்சை எளிதாக சமாளித்தது.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சங்கக்கார, டெஸ்ட் அரங்கில் தனது 22வது சதமடைத்தார். இவர் 103 ஓட்டங்கள் எடுத்த நிலையில் செவாக் சுழலில் சிக்கினார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய பரனவிதனா டெஸ்ட் அரங்கில தனது முதல் சதமடித்தார். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்கு 256 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. பரனவிதான (110) மஹேல ஜயவர்தன (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய சார்பிபல் அபிமன்யூ மிதுன் செவாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *