எம்.டி.வி தொலைக்காட்சி நிலையத் தாக்குதல் – சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

sirasa-02.jpgஎம்.டி.வி தொலைக்காட்சி நிலையத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை மகரகம பொலிஸாரால் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ‘ரஞ்சித் குணசேகர’ தெரிவித்துள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் கோட்டே நகரசபையின் ஐ.தே.க. உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அறிய வருகிறது .கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் ‘டிபென்டர்’ வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *