தமிழர்களுக்காக மற்றுமொருவர் தீக்குளித்ததாக பரபரப்பு : ஸ்டவ் வெடித்ததில் தீக்காயமடைந்தார் – போலீஸார்

திண்டுக்கல் மாவட்டம் – பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (46). இவர் நேற்று இரவு பலத்த தீக்காயத்துடன் மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை ரவியின் மகன் பிரபாகரனுடன் வக்கீல்கள் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் குதித்தனர். ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்துத்தான் ரவி தீக்குளித்தார். ஆனால் இதை போலீஸார் மறைக்க முயலுகிறார்கள் என்று கூறி போராட்டம் நடத்தினர். பிரபாகரனும், தனது தந்தை ரவி ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்தார் என்று தெரிவித்தார்.

ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர். ரவி மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அவர் வீட்டில் ஸ்டவ் வெடித்ததில் தீக்காயமடைந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று கூறினர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *