பொலிஸார் தாக்கியதில் ஒருவர் வைத்தியசாலையில் !

வவுனியாவில் புளியங்குளம் பொலிஸாரினால் தாக்கப்பட்ட ஒருவர், வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,  புளியங்குளம் – இராமனுர் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் பாலகிருஸ்ணன் (வயது- 50) என்பவரின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) மாலை சென்ற புளியங்குள பொலிஸார், இடியன் துப்பாக்கி இருக்கின்றதா? என விசாரித்து குறித்த நபரை கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள்.

இவ்வாறு கைது செய்து அழைத்துச் சென்ற அவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதன் பின்னர், மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில் விடுதலை செய்துள்ளனர்.

இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட குறித்த நபர்,  நேற்று (வெள்ளிக்கிழமை) வீட்டாரின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *