குஜராத்தில் திடீரென பரவிய ஹெபடைடிஸ்- பி

aep-hl-hepatitis.jpgஇந்தியா வின் குஜராத் மாநிலத்தில் மொடாஸா மாவட்டத்தில் ஹெபடைடிஸ் – பி ரக வைரஸ் திடீரென பரவியதால் பலர் பாதிக்கப்பட்டனர். அது, அஹமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. அந்த வைரஸ் காரணமாக இதுவரை, 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மருத்துவமனைகளில் மருந்துகள் செலுத்தப் பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் எனப்படும் ஊசிக்குழல்களை மீண்டும் பயன்படுத்தியதே, ஹெபடைடிஸ் – பி வேகமாகப் பரவக் காரணம் என்று கூறப்படுகிறது.

அந்த ஊசிக்குழல்களை, தனியார் மருத்துவமனைகளில் இருந்து வாங்கி, மொத்தமாக விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதுபோன்ற ஊசிகளைப் பயன்படுத்திய தனியார் மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் நடத்திய சோதனையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லட்சக்கணக்கான ஊசிக்குழல்கள் கைப்பற்றப்பட்டன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *