ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் நேபாளத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் நேபாள விஜயம் குறித்து ஆராயும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உபேந்திர யாதேவ் நேற்று முன்தினம் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
palli
ஒரு குடிமகனாக சொல்லுகிறேன் (அந்த குடிமகனல்ல) நீங்களும் எல்லா நாட்டுக்கும் போறியள் நல்லுறவு வளர்க்க என சொல்லுறியள். பின்பு அவர்களுடன் லுங்கியை மடித்து கட்டுறியள். ஆனால் ஒருசில பேருக்குதான் தெரியும் தாங்கள் எல்லா நாட்டுக்கும் கடன்வேண்டதான் அலைவது. வேண்டுங்கோ வேண்டுங்கோ லண்டனில் சில தமிழர் கடன் வாங்குவதே கட்டாமல் விடதான் என நண்பர் சொன்னார். அதேபோல் உங்கள் காலதில் திருப்பும் கடன் இல்லைதானே ஆகையால் எம்முட்டு முடியுமோ அவ்வளவையும் வேண்டி இரும்பு(ஆயுதம்) வேண்டுங்கோ.