புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் கைப்பற்றிய புலிகளின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப நிலையத்தில் தேடுதல் நடத்திய படையினர் புலிகளுக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் இடையில் உள்ள நெருங்கிய உறவுகள் தொடர்பான படங்களையும் வீடியோக்களையும் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வன்னி பயங்கரவாத நடவடிக்கைகளில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு உள்ள நேரடித் தொடர்புகளை இந்தப் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. திராவிட மறுமலாச்சிக் கழகத் தலைவர் வைகோ புலிகளின் சீருடையில் பிரபாகரனுடன் கைத்துப்பாக்கி சுடும் நிலையில் படங்களில் காணப்படுகிறார்.
பழ. நெடுமாறன் உட்பட மற்றும் தமிழக அரசியல் முக்கியஸ்தர்களின் படங்களையும் படையினர் இங்கு கண்டெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தினால் புலிகள் தோற்கடிப்பதைதத் தடுக்க வைக்கோ பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டுவருவது தமிழ் மக்களைப் பாதுகாக்கவல்ல, வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தமிழ் ஈழத்துக்கான தேசிய தொலைக் காட்சி சேவையொன்றை நடத்துவதற்கான வீடியோ பதிவுகளையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் புலிகள் தமது ஒளிபரப்பை மூன்று மொழிகளிலும் செய்மதியூடாக மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.