ஆறு வயது மாணவி வர்ஷா கடத்தல், கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஐவர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஐவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக்கவில்லை. இவர்கள் மீது தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, பொலிஸாரிடமிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது, பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒப்ரின் மெரர்வின் ரெனோனின் மரண விசாரணையை திருகோணமலை நீதிவான் ரி.எல்.ஏ. மனாப் நடத்தினார்.
இம்மரண விசாரணையும் மாணவி வர்ஷாவின் கொலை பற்றிய மரண விசாரணையும் திருமலை நீதிவான் மனாப்பினால் இன்னொரு திகதியில் நடத்தப்படவிருப்பதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.