ஏ9 வீதியில் புளியங்குளத்தில் இரண்டாவது பொலிஸ் நிலையம்

sri-lanka-police.jpg“ஏ9′ வீதியில் விரைவில் இரண்டாவது பொலிஸ் நிலையம் திறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி யாழ்ப்பாணம் (ஏ9) வீதியில் ஏற்கனவே ஓமந்தையில் பொலிஸ் நிலையம் திறக்கப்பட்ட நிலையில், தற்போது புளியங்குளம் பகுதியில் 2 ஆவது பொலிஸ் நிலையத்தை திறக்கவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், புளியங்குளத்திற்கு வடக்கே கனகராயன் குளம் பகுதியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் (எஸ்.எஸ்.பி.) காரியாலயம் திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் “ஏ9′ வீதியூடாகச் செல்லும் இராணுவ வாகனங்களின் பாதுகாப்பு கருதி அந்த வீதியின் இரு மருங்கிலும் படையினர் பாதுகாப்பு அரண்களையும் பதுங்குக்குழிகளை அமைத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதியை அண்டிய பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவடைந்ததும் வெகு விரைவில் இந்த வீதி ஊடாக பொது மக்கள் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படுவரெனவும் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *