01

01

ஒக்ஸ்போர்ட் மாணவர் ஒன்றியத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ள இருந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டது!

MR_PresidentOfSLஒக்ஸ்போர்ட் மாணவர் ஒன்றியத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொண்டு உரையாற்ற இருந்த நிகழ்வு பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டதாக ஒக்ஸ்போர்ட் யூனியன் சொசைட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை பாதித்துள்ள காரணத்தினால் இந்த நிகழ்வு இடைநிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

முழுமையான அறிக்கையும் ஜனாதிபதியின் செயலாளரின் அறிக்கையும் கீழே:

Statement from The Oxford Union on the visit of President Rajapaksa:

Earlier this year, The Oxford Union invited the current President of Sri Lanka, Mahinda Rajapaksa, to address our members at a date convenient to him. The Union has a policy of inviting a broad range of prominent politicians and heads of state from around the world and the invitation to Mr. Rajapaksa was made within the context of this policy.

Since the invitation was first accepted by Mr. Rajapaksa, the Union has consulted extensively with Thames Valley Police as well as the Sri Lankan High Commission in London on security arrangements for the President’s visit. Due to security concerns surrounding Mr. Rajapaksa’s visit which have recently been brought to our attention by the police, the Union has regretfully found that the talk is no longer practicable and has had to cancel his address.

This decision was not taken lightly and the Union deeply regrets the cancellation. The Union has a long tradition of hosting prominent speakers and upholding the principles of free speech. However, due to the sheer scale of the expected protests, we do not feel that the talk can reasonably and safely go ahead as planned.

The Union holds a politically neutral stance with regards to speakers and the decision was not made in relation to any aspect of Mr. Rajapaksa’s political position, the policies of his administration or any allegations against his government. As the President of Sri Lanka for the last five years, the Union felt that Mr. Rajapaksa would provide a unique insight into the political climate of the region in his speech. The Union wishes to apologise to our members for this unfortunate cancellation.

Oxford Union Society
Alistair Walker
Press Officer

Statement issued by Mr Lalith Weeratunga, Secretary to the President of Sri Lanka:

For security reasons the speech by His Excellency President Rajapaksa of Sri Lanka at the Oxford Union, the home of free speech, has been cancelled. This is a decision that has been made unilaterally by the Oxford Union, reportedly as a result of pressure applied by pro-LTTE activists.

His Excellency said:

“I am very sorry this has had to be cancelled but I will continue to seek venues in the UK and elsewhere where I can talk about my future vision for Sri Lanka.”

His Excellency went on to say:

“I will also continue in my efforts to unite all the people of our country whether they live in Sri Lanka or overseas.

As a united country we have a great future.

If we allow divisions to dominate we will not realise our true potential.

We have had thirty years of division and conflict. We must now secure peace and harmony for all Sri Lankans.”

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோள் கொடுக்கும் லிற்றில் எய்ட்

Mannar_Children_Projectலிற்றில் எய்ட் இரண்டாவது ஆண்டாகத் தனது உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. தற்போது லிற்றில் எய்ட் உடன் குளோபல் மெடிகல் எய்ட் டென்மார்க் மெடிகல் சென் புரொன்ரியர்ஸ் ஆகிய சர்வதேச அமைப்புகளும் அகிலன் பவுண்டேசன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அயர்லன்ட் ரீஸ்ரோரேசன் சொசைட்டி ஆகிய அமைப்புகள் லண்டனில் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவித் திட்டங்களை முன்னெடுக்கின்றனர். இலங்கையில் டி லா சலே பிரதேர்ஸ், சிந்தனை வட்டம், சென் அந்தோனிஸ் கல்லூரி, புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்கம், அகம், வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயம் என்பனவும் லிற்றில் எய்ட் உடன் இணைந்து உதவித் திட்டங்களுக்கு ஒத்தாசை வழங்கி வருகின்றன.

Eluvaitheevu_Well_Project1.
2010 யூலையில் எழுவை தீவில் 130000 நிதியில் அப்பகுதி மக்களுக்கு நன்னீர் அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்குமாறு அயர்லன்ட் ரீஸ்ரோரேசன் சொசைட்டி சார்பில் சீறிபதி சிவனடியார் ஒரு ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து சேகரித்த நிதியை லிற்றில் எயட்க்கு கையளித்தார்.

ஒக்ரோபர் 19 நன்னீர் கிணறு அமைக்கும் திட்டம் முற்றுப்பெற்று மக்களுடைய பாவனைக்கு விடப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்ற புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்க உறுப்பினர்கள் தங்கள் உழைப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தை நிறைவு செய்து கையளிக்கும் நிகழ்வில் லிற்றில் எய்ட் சார்பில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ரி கொன்ஸ்ரன்ரைன் லிற்றில் எயட் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் உதயனன் ஆகியோர் கலந்து கொண்டனர். புனித தோமையர் கடற்தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ரி செல்வதாஸ் துனைச் செயலாளர் ஜஸ்ரின் பெர்னான்டோ நிர்வாகஸ்தர் எம் ஜே ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Mannar_Children_Project2.
லண்டன் அகிலன் பவுண்டேசன் லிற்றில் எய்ட் ஏற்பாட்டில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் சிறுவர் போராளிகளை டி லா சலே பிரதேர்ஸ் இன் மேற்பாவையில் பராமரித்து வருகின்றனர். இவ்வாண்டு ஜனவரியில் அகிலன் பவுண்டேசன் உத்தியோகபூர்வமாக இச்சிறுவர் போராளிகளை பொறுப்பேற்று அருட்சகோதரர்களின் மேற்பார்வையில் பராமரிக்கின்றனர். அருட் சகோதரர் கே எஸ் யோகநாதன் இவர்களுக்குப் பொறுப்பாக உள்ளார். அவர்கள் சென் எக்சேவியர் கல்லூரியில் தங்கள் கல்வியையும் தொடர்கின்றனர்.

இம்மாணவர்களுக்கு தங்குமிட வசதி இன்மையால் இவர்களுக்கு ஒரு கட்டிடதை அமைத்து ஒரு தொகுதியினரை அங்கு தங்க வைப்பதற்கு அகிலன் பவுண்டேசன் முன் வந்தது. 3000000 செலவில் அமைக்கப்பட்ட இக்கட்டிடம் ஒக்ரோபர் 20ல் திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்களும் அப்பகுதி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இக்கட்டிடத்தை அகிலன் பவுண்டேசன் நிறுவனர் கோபால கிருஸ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் லிற்றில் எய்ட் சார்பிர் ரி கொன்ஸ்ரன்ரைன் கலந்துகொண்டார். சென் எக்செவியர் கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ஸ்ரெயின்ஸ்லஸ உம் கலந்துகொண்டார்.

Kayts_St_Anthonys_College_Project3.
லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் உதவியுடன் லற்றில் எய்ட் ஊர்காவற்துறையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான மற்றுமொரு திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. சென் அந்தோனிஸ் கல்லூரியில் தங்கியுள்ள மாணவர்களை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் பொறுப்பேற்று அருட் தந்தை ரொபின்சன் மேற்பார்வையில் பராமரிக்கின்றனர்.

பெரும்பாலும் சைவ சமயத்தவர்களான இந்த மாணவர்கள் தங்கள் சமய வழக்கங்களை சுயாதீனமாகப் பின்பற்றி வருகின்றனர். மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்துடன் இந்த உதவித்திட்டம் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒக்ரோபர் 19ல் அருட்தந்தை ரொபின் யையும் நிர்வாகஸ்தர் வின்சன் நடராஜாவையும் லிற்றில் எய்ட் குழுவினர் சந்தித்து உரையாடினர். அச்சமயம் இம்மாணவர்கள் வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரியுடன் விளையாட்டு போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NavaJeevan_N_and_Puniyameen_PM4.
கல்முணை மற்றும் திருகோணமலையில் மாணவ மாணவிகளுக்கு கணணிப் பயிற்சிகளை வழங்கி வரும் ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ அமைப்பிற்கு 7 கணணிகள் ஒக்ரோபர் 30 2010ல் கையளிக்கப்பட்டது. லிற்றில் எயட் சிந்தனை வட்டம் சார்பில் பிஎம் புன்னியாமீன் கணணிகளை ‘தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பு’ முகாமையாளர் நவஜீவனிடம் கையளித்தார்.

ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் கேசரித்த பயன்படுத்தப்பட்ட கணணிகளை லிற்றில் இலங்கைக்கு அனுப்பி சிந்தனைவட்டம் பி எம் புன்னியாமீன் ஒருங்கிணைப்பில் திருத்த வேலைகளையும் மேற்கொண்டது. இவற்றுக்கான செலவுகளை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் மூலம் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களுக்கு கணணிகள் வழங்கும் ஒரு நீண்ட திட்டத்தை லிற்றில் எய்ட் ஆரம்பித்து வைத்துள்ளது. இத்திட்டம் முதலில் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் அகிலன் பவுண்டேசன் கற்பகவிநாயகர் ஆலயம் என்பனவற்றினால் நடாத்தப்படுகின்ற இல்லங்களில் உள்ள 1000 வரையான மாணவர்களுக்கு கணணி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிக்கின்றது.

Katpaga_RiceMill_Satchi_Gopal5.
ஒக்ரோபர் 16 2010 மூதூர் பாட்டாளிபுரம் கிராமத்தில் 3 கோடி ரூபாய் செலவில் ‘கற்பக அரசி ஆலை’ அமைக்கும் முயற்சி ஆரம்பித்து வைக்கப்பட்டு உள்ளது. லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் பெயரில் உருவாக்கப்பட உள்ள இந்த அரசி ஆலைக்கு ‘அகிலன் பவுண்டேசன்’ ஆதரவளிக்கின்றது. ஒக்ரோபர் 8ல் இலங்கை சென்ற அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன் பல்வேறு உதவித்திட்டங்களை அங்கு மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு அங்கமாக இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் 1997 முதல் சிறுவர், பெண்கள், விதவைப் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சிறுதொழில், சிறு கடன் உதவிகள் வழங்கிவருகின்ற ‘அகம்’ அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

2010 ஏப்ரல் முற்பகுதியில் ‘லிற்றில் எய்ட்’ திட்ட இணைப்பாளர் த ஜெயபாலனிடம் ‘அகம்’ திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் பொ சற்சிவானந்தம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை வலியுறுத்தி விடுத்த வேண்டுகோளை அடுத்து இந்த அரசி ஆலைக்கான திட்டத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட உதவித் திட்டங்கள்:

வடக்கு கிழக்கு மாணவர்களுக்கு கணணி வழங்கும் திட்டம் ஆரம்பம். – லிற்றில் எய்ட்

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை வலியுறுத்துகிறது ‘அகம்’ திருகோணமலை இளைஞர் அமைப்பு

இலங்கை சுகாதார அமைச்சுக்கும் லிற்றில் எய்ட் க்கும் இடையே புரிந்தணர்வு உடன்பாடு
 
லிற்றில் எய்ட் காயப்பட்ட படைவீரர்களுக்கு இன்ரநெற் மையம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது
 
எழுவைதீவில் நன்னீர் கிணறு: லிற்றில் எய்ட் உம் எழுவைதீவு மீனவ சமூகமும் இணைந்த வேலைத்திட்டம்
 
மதங்களைக் கடந்து இணைந்து உதவும் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் சென் அந்தனீஸ் கல்லூரியும்
 
200 000 பவுண்கள் பெறுமதியான மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் ஆல் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது!
 
சாதி மத இன பேதங்களைக் கடந்து லிற்றில் எய்ட் கரம் கொடுக்கின்றது.
 
புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டிருந்த 200 சிறுவர்கள் விடுதலை!
 
முன்னாள் போராளிகள் உட்பட 495 பேர் பெற்றோர்களிடம் ஒப்படைப்பு!
 
1.54 மில்லியன் அமெரிக்க டொலர் மருந்துப் பொருட்கள் லிற்றில் எய்ட் மூலம் தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்டது! : த ஜெயபாலன்
 
வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்
 
துப்பாக்கியில் இருந்து இசையை நோக்கி! – முன்னாள் குழந்தைப் போராளிகள் : ரி கொன்ஸ்ரன்ரைன்
 
மறக்கப்படும் வன்னி மக்களும், மறந்து போகும் புலம்பெயர் மக்களும். – லிற்றில் எய்ட்கள் தொடர வேண்டும்!!! : த ஜெயபாலன்
 
டென்மார்க்கில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் விநியோகம் : லிற்றில் எய்ட்
 
லிற்றில் எய்ட் இன் சின்னச் சின்ன உதவிகள் : வி அருட்சல்வன்
 
வன்னி மக்களின் இன்றைய எதிர்காலத் தேவைகளும் அதை நோக்கிய செயற்பாடுகளும். மே 17 சந்திப்பு : த ஜெயபாலன்

Related Article:

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

லிற்றில் எய்ட் இன் தலைவியாக டொக்டர் மரினி மனுவேற்பிள்ளை நியமனம்! லிற்றில் எய்ட் 3.5 மில்லியன் மருந்துப் பொருட்களை விநியோகித்தது!

தேசிய பாதுகாப்புதின நிகழ்வையொட்டி வீரசிங்கம் மண்டபம் 5மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.

இவ்வருடம் தேசிய பாதுகாப்புதின நிகழ்வுகள் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகளை ஒருங்கமைப்பதற்காக அமைக்கப்பட்ட 14 உபகுழுக்கள் நேற்று செவ்வாய் கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் கூடி கலந்துரையாடல்கள் மேற்கொண்டது.

ஜனாதிபதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பாதுகாப்புதின நிகழ்வகளில் கலந்து கொள்வதை முன்னிட்டு வீரசிங்கம் மண்டபம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினத்தையொட்டி பல நிகழ்வுகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ‘இயற்கை அனர்த்தத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பது’ என்கிற தொனிப்பொருளில் 23 ஊர்திகளின் அணிவகுப்பு கண்காட்சியும் இதில் ஒன்றாகும். இந்த அணிவகுப்பு யாழ். முற்றவெளியில் ஆரம்பமாகி யாழ்.நகரைச் சென்றடைந்து மீண்டும் முற்றவெளியை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சிறைக் கைதிகள் தொடர்பான தகவல்கள் கணனி மயப்படுத்தப்பட உள்ளன.

Magazine_Prisonஇலங்கையில் நாடு முழுவதிலுமுள்ள சிறைக் கைதிகளின் விபரங்களை கணனி மயப்படுத்த புனர்வாழ்வு மற்றும், சிறைச்சாலைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி சிறைகளிலிருக்கும் சுமார் 27ஆயிரம் சிறைக்கைதிகள் தொடர்பான சகல தகவல்களும் கணனி மயப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாகப் பதவியேற்றுள்ள புனர்வாழ்வு மற்றும், சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் இது தெடர்பான பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு கைதி சிறைச்சாலைக்கு வந்த நாள் முதல் அவர் விடுதலையாகும் வரையிலான தகவல்கள் அனைத்தும் தற்போது கோப்புகளிலேயே உள்ளன. அவை யாவும் கணனி மயப்படுத்தப்பட்டதும் கணப்பொழுதில் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட உரிமையாளர்களற்ற காணிகள் பிரதேச சபையினால் கையேற்கப்படவுள்ளன.

யாழ். நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட உரிமையாளர்களில்லாத, பராமரிப்பற்ற காணிகளை நல்லூர் பிரதேசசபை கையேற்கவுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இவ்வாறான காணிகளின் முன்பாக ‘இக்காணி பிரதேச சபையினால் கையேற்றக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது’ என்ற வாசகங்களடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டு வருகன்றன.

இதேவேளை, டெங்கு ஒழிப்பைக் கவனத்தில் கொண்டு காணிகளிலுள்ள பற்றைகளை உரிமையாளர்கள் துப்புரவு செய்ய வேண்டும் எனவும் நல்லூர் பிரதேசசபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது,

யாழ்.குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் அதிகரிப்பு.

யாழ்.குடாநாட்டில் மீண்டும் வழிப்பறி மற்றும், கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் 2 மணியளவில் மானிப்பாயில் பெண்ணொருவர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டை முடித்துக் கொண்டு வரும் வழியில் இருவர் அவரின் தாலிக்கொடியை அறுத்துள்ளனர். அவர்கள் தப்பியோடும் பொழுது குறித்த பெண் கூக்குரலிட அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் திருடர்களைப் பிடித்து நையப்புடைத்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நேற்று முன்தினம் திங்கள் கிழமை இரவு கைதடியில் ஒரு இரவில் முன்று வர்த்தக நிலையங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் யாழ். குடாநாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் .இடம்பெற்றுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற கொள்ளை மற்றும், கடத்தல் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தன. தற்போது கொள்ளைச் சம்பவங்கள் மீண்டும் தலையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.