சனல் – 4 குற்றச்சாட்டுக்களை ஆராய பாராளுமன்ற விசேட குழு !

செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், விசாரணை செய்வதற்கான பாராளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி குறித்த பிரேரணை பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *