2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமானவையாக அமையலாம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

2024 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்கள் கடினமானவையாக அமையலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(14) மாலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

ஒரே தடவையில் முடியாமற்போனாலும், சிறிது சிறிதாக மீண்டெழ முடியும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கான உள்நாட்டு உற்பத்தி இலக்கை குறிப்பிடத்தக்க அளவு அடையலாம் என ஜனாதிபதி கூறினார்.

நாடு 2018 ஆண்டின் நிலைமைக்கு இன்னமும் திரும்பவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டிலிருந்தே நாட்டின் சரியான பயணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தற்போதைய நடவடிக்கைகள் அதற்கான தயார்ப்படுத்தல் மாத்திரமே என சுட்டிக்காட்டியுள்ளார்​.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *