கிளிநொச்சி ஆளுமைகளை ஆவணப்படுத்திய “யார் எவர் – கிளிநொச்சி 2023” நூல் வெளியீடும் அமரர் சிவஜோதி ஞாபகார்த்த விருது வழங்கலும் !

கிளிநொச்சி மாவட்டத்தில் இலவச தொழில்கல்வி நிறுவனமாக கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் லிட்டில் எய்ட் திறன் விருத்தி மையத்தின் முன்னாள் பணிப்பாளரும் – சமூக செயற்பாட்டாளருமான அமரர் வயீத்தீஸ்வரன் சிவஜோதி அவர்களின் 52ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு வருடாந்த ஞாபகார்த்த நிகழ்வு எதிர்வரும் 18.11.2023 சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள லிட்டில் எய்ட் கல்வி பண்பாட்டு மையத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான திரு.சி.கருணாகரன் தலைமையில் இடம்பெறும் மேற்குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் 100 ஆளுமைகளை ஆவணப்படுத்தி வெளிவரும் “யார் எவர் – கிளிநொச்சி 2023” என்ற நூல் வெளியீடு இடம்பெறவுள்ளதுடன் சிவஜோதி ஞாபகார்த்த விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அன்பளிப்பு பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *