ஒரே வருடத்தில் பொலிஸ் காவலில் இருந்த 20 பேர் பலி !

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களின் மரணங்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

 

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பொலிஸ் காவலில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 11ஆம் திகதி குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *