யாழில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் – வடமராட்சி வெற்றிலைக்கேணி வத்திராயன் பகுதியில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன்  சந்தேக நபரும்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை  (28)    இடம்பெற்றதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்  தாளையடி பகுதியை  சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட 03 பிளாஸ்டிக்  பரல்களில் அடைக்கப்பட்டிருந்த 17 பொதிகளில் கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா சுமார் 34 கிலோ 400 கிராம் எடை கொண்டது எனவும் மொத்த மதிப்பு 13 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *