பாடசாலை மாணவிகள் மத்தியில் அதிகரிக்கும் போதை மாத்திரை பாவனை – இராணுவப் புலனாய்வுப் பிரிவு

அநுராதபுரம் மற்றும் களுத்துறை மாவட்டங்களில் பாடசாலை மாணவிகள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, அனுராதபுரத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

குறித்த மருந்தகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் மத்தியில் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், போதைப்பொருள் வாங்குவதற்காக பாடசாலை மாணவிகள் முறையற்ற விதத்தில் பணம் ஈட்டியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, களுத்துறை மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் மத்தியிலும் போதை மாத்திரை பாவனை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தம்மிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *