யாழ் நகரில் பாடசாலை மாணவர்களை குறிவைத்து மாவா போதைப்பொருள் விற்பனை !

யாழ் நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 33 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *