இந்தியாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட 18 ஆயிரம் சட்டவிரோத போதை வில்லைகள் – இருவர் கைது !

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத போதை வில்லைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (20) காலை மன்னாரில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

காவல்துறையின் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரிடமிருந்து 18 ஆயிரம் சட்டவிரோத போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் தோட்டவெளி மற்றும் தாழ்வுபாடு பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *