உலக ஊழல் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம் – பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் கவலை !

உலகில் ஊழலில் இலங்கை முதலிடத்தில் இருப்பது வருத்தமளிப்பதாக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தெரிவித்துள்ளார்.

கட்டான ஹல்பே புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் இன்று இடம்பெற்ற பிரதான நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தனது நத்தார் ஆராதனை உரையில் மேலும் தெரிவிக்கையில்,

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையும் சட்டத்தையும் புறக்கணிக்கும் மோசடியின் கைக்குள் நாடு வீழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கம் கிடைத்துள்ளதால் இந்த நாடு ஊழலிலிருந்து விடுபடும் நாள் இன்னும் வெகு தொலைவில் உள்ளது என கர்தினால் மேலும் தெரிவித்தார்.

 

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *