செங்கடலில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் !

செங்கடலில் ஏடன் வளைகுடாவில் அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானம் தமது கப்பலை தாக்கியதாகவும் ஆனால் கப்பல் பெரிய அளவில் சேதமடையவில்லை என்றும் அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

 

ஹவுதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதளுக்கு பின்னர் அமெரிக்க கப்பல் மீதான இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

 

கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும் கப்பலும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அக் கப்பலின் கேப்டன் தெரிவித்தார்.

காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இலக்குகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுதது வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள அமெரிக்கத்  தூதரகம் அருகே இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் நாட்டின் புரட்சி காவற்படை பொறுப்பேற்றுள்ளது. இதேவேளை இத்தாக்குதல்களில் அமெரிக்கப்படைவீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என ஈரான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

 

இத்தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *