பல்கலைகழங்களில் தொடரும் பகிடிவதைகள் – ஆறு மாத காலத்திற்குள் 82 முறைப்பாடுகள் !

பகிடிவதை தொடர்பில் முறையிடுவதற்காக கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 82 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இந்த விசேட தொலைபேசி இலக்கமானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த விசேட தொலைபேசி இலக்கமானது 24 மணிநேரமும் சேவையில் காணப்படுவதோடு 3000ற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த முறைப்பாடுகள் தொடர்பில் செயற்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *