சாந்தனை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பில் நடிவடிக்கை – சாந்தனின் தாயாரிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

 

அதன்போது சாந்தனின் தாய் மற்றும் சகோதர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று(30)சந்தித்து, சாந்தன் நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.

 

அத்தோடு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சுகயீனம் காரணமாக தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தாயார் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு அமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சாந்தனை நாட்டிற்கு அழைத்துவருவது தொடர்பில் நடிவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *