பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம்: எஞ்சிய 61 பேருக்கான நியமனம் மீளாய்வு

sri-lanka-upcountry.jpgமத்திய மாகாணத்தில் 61 பேருக்கான ஆசிரியர் நியமனத் தெரிவு மீளாய்வு செய்யப்படவுள்ளது.

கடந்த இரு வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட பெருந்தோட்ட ஆசிரிய நியமனத்தின் எஞ்சிய 61 பேருக்கான நியமனத்திற்கான பெயர்ப்பட்டியல் நேர்முகப் பரீட்சையின் பின் கடந்த வருட இறுதியில் வெளியிடப்பட்டது.

இந்நியமனம் வழங்கும் முன் மாகாண சபை கலைக்கப்பட்டதுடன், தற்காலிகமாக நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின் தற்போதைய மத்திய மாகாண கல்வி அமைச்சர், பதவியேற்றவுடன் உடனடியாக இந்நியமனங்களை இரத்துச் செய்ததுடன் மீளாய்வு செய்யப்படும் என்றார்.

அமைச்சர் பி. இராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் மீளாய்வு நடவடிக்கை கெட்டம்பே கல்வி அமைச்சில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.

பெயர்ப்பட்டியல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட பின் நேர்முகப் பரீட்சை இம்மாத இறுதிக்குள் நடாத்தப்படும் என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *