யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(19)இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் – இருபாலை வீதியில் உள்ள இடமொன்றை இளைஞர்கள் போதைப்பொருள் நுகர்வுக்கு பயன்படுத்துவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது அங்கு நான்கு இளைஞர்கள் போதை பொருளை நுகர்வதற்கு தயாராக காணப்பட்ட நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் , ஊசியும் (சிறிஞ்) மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், குருநகர் பகுதியை சேர்ந்தவரிடம் தான் போதைப்பொருளை கொள்வனவு செய்வதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருளை விற்பனை செய்தவரை அடையாளம் கண்டுள்ள காவல்துறையினர் அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *