வெள்ளமுள்ள வாய்க்கால் நோக்கி படையினர் நகர்வு

பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் அமைந்துள்ள வெள்ளமுள்ள வாய்க்கால் பாலத்தை பாதுகாப்புப் படையினர் அண்மித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வெள்ளமுள்ள வாய்க்கால் பாலத்திற்கு 700 தொடக்கம் 800 மீற்றர் தொலைவில் இராணுவத்தின் 53வது மற்றும் 58வது படைப் பிரிவினர் நிலை கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திற்கான ஒரு பிரதான பாதையை அமைத்து புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே படையினரின் நோக்கம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *