‘ஹலால் ஜிம்’ கொமன்ற் – இஸ்லாமிய விரோதத்தையும் குடும்பப் பெண்களின் படங்களையும் சமூக வலைத்தளங்களில் பரப்பும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன்

லண்டன் மேயர் சித்திக் கானை இஸ்லாமிய தீவிரவாதிகள் இயக்குகிறார்கள் என்று வலதுசாரி கொன்சவேடிவ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லீ அன்டர்சன் பெப்ரவரி பிற்பகுதியில் குற்றம்சாட்டி இருந்தார்;. இக்கருத்து தவறானது என்று தெரிவித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக், அது இஸ்லாமிய விரோதக் கருத்துடையது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ரஷி சுனாக்குக்கு எதிராக தலைமைத்துவப் போட்டியில் களமிறங்க உள்ள மற்றுமொரு தீவிர வலதுசாரி சுவலா பிரவர்மன், பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டிக்கும் ஆர்ப்பாட்டங்களை ‘கலகக் கும்பல்கள்’ என்று விபரித்து வருகின்றார். அதே கட்சியின் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் ‘லெட்டர் பொக்ஸ்’ பகிடி 2018இல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பொறிஸ் ஜோன்சன் இஸ்லாமிய பெண்களின் கலாச்சார ஆடையைப் பற்றி பின்ருமாறு கூறினார்: பெண்கள் தபால் பெட்டிகள் போலவும் வங்கிக் கொள்ளையர்கள் போலவும் உடையணிந்து கொள்வது மிகவும் அபத்தமாக இருக்கின்றது – “it was “absolutely ridiculous” women chose to “go around looking like letterboxes” and “bank robbers”. பாலஸ்தீனத்தில் 30,000 உயிர்கள் கொல்லப்பட்டு பாலஸ்தீனக் குழந்தைகள் பட்டினியில் மரணத்தை தழுவ ஆரம்பித்துள்ள இந்நிலையில் மேற்கு நாடுகளில் இஸ்லாமிய விரோதப் பரப்புரைகளால் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மம் கொழுந்துவிட்டெரிகின்றது.

இந்நிலையில் உரிமைப்போராட்டத்தை நடத்திய ஈழத்தமிழ் சமூகத்திலிருந்து வந்து, லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளராகவும் லண்டன் சைவத்திருக்கோயில்கள் அமைப்பிலும் இருக்கும் ஆர் ஜெயதேவன் ‘ஹலால் ஜிம்’ என்று கருத்துப் பதிந்து முஸ்லீம் பெண்கள் உடற் பயிற்சி செய்வதை கிண்டலடிக்கும் குறும் காணொலி ஒன்றை இன்று பெப்ரவரி 28இல் பகிர்ந்துள்ளார். அதனை நீக்குமாறு தேசம் ஜெயபாலன் விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்துள்ளார்.

லண்டன் வெம்பிளியில் உள்ள ஈழபதீர்வரர் ஆலயமும் அதன் உரிமையாளரும் எப்போதும் சர்ச்சைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களின் கைகளில் இருந்த ஆலயம் ஆர் ஜெயதேவனின் கைக்கு மாறியது முதல் இன்று வரை சர்ச்சைகள் ஓயவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தையும் தனக்குப் பிடிக்காதவர்களையும் தாக்குவதற்காக ஆர் ஜெயதேவன் இருபது ஆண்டுகளுக்கு முன் ‘விடுதலை’ என்ற பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார். அன்ரன் பாலசிங்கத்தையும், தனக்கு பிடியாதவர்களையும் திட்டித் தீர்த்து நான்கு இதழ்களோடு அது நின்றுவிட்டது.

இப்போது ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் சமூக வலைத்தளங்களில் இனக்குரோதத்தை வளர்க்கும் வகையில் முஸ்லீம் சமூகத்தை கிண்டல் அடிக்கின்ற வீடியோ ஒன்றை லண்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தின் சமூகவலைத் தளத்தில் ‘ஜெ‘ என்ற பெயரில் பதிவிட்டுள்ளார். லண்டன் சைவத் திருக்கோயில்களின் அறங்காவலர்கள், உரிமையாளர்கள், பக்தர்கள் உள்ள இந்த வட்ஸ்அப் சமூகவலைத் தளத்திலேயே இப்பதிவு ஏற்றப்பட்டுள்ளது.

இஸ்லாமியப் பெண்கள் தங்களுடைய இஸ்லாமிய கலாச்சார உடையோடு வெவ்வேறு உடற் பயிற்சிகளைச் செய்வதை அந்த வீடியோ காட்டுகின்றது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழையும் ஒரு கறுப்பின இளைஞன் அவர்கள் இஸ்லாமிய கலாச்சார உடையோடு உடற் பயிற்சியை மேற்கொள்வதை விசித்திரமாகப் பார்த்துவிட்டு தனது நளினத்தை தலையசைத்து காட்டியவாறு அங்கிருந்து வெளியேறுவதாக, அக்குறும் காணொலி காட்டுகிறது. இந்த வீடியோவுக்கு ஆர் ஜெயதேவன் ‘ஹலால் ஜிம்’ பாருங்கள் எனும் வகையில் கையால் திரையைக் குறிப்பிடும் குறியீட்டையும் சிரிப்புக்கான குறியீட்டையும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோபதிவு முஸ்லீம் பெண்கள் தங்கள் இஸ்லாமிய கலாச்சார உடையணிந்து உடற்பயிற்சி செய்வதாக காட்டப்பட்டாலும் அது போலித் தன்மையுடையதாகவே உள்ளது. இது முஸ்லீம் பெண்களை கொச்சைப்படுத்தும் நோக்கில் சில விசமிகளால் தயாரிக்கப்பட்ட போலியான வீடியோ போன்றேயுள்ளது. அந்த வீடியோ போலியானதோ உண்மையானதோ என்பதல்ல இங்கு பிரச்சினை. இதனை ‘ஹலால் ஜிம்’ என்று சொல்லி ஈழபதீஸ்வரர் ஆலயத்தினதும் லண்டன் சைவத் திருக்கோயில்கள் ஒன்றியத்தினதும் முக்கியஸ்தரும் தன்னை ஜனநாயகவாதியாகவும் சமூக அக்கறையுடையவராகவும் மாற்றுக் கருத்துடையவராகவும் விம்பம் கட்டும் ஆர் ஜெயதேவன் சமூகவலைத்தளங்களில் பகிருவதற்கு பின்னாலுள்ள மனநிலையும் மற்றைய சமூகங்களை மதங்களை எள்ளி நகையாடுவதும் ஆபத்தானது.

லண்டனில் தவறணை நடத்துபவர்கள், பார் நடத்துபவர்கள் இவ்வாறான பதிவுகளை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது அவ்வாறானவற்றை பகிருவது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஏனெனில் மது வியாபாரத்தை அதிகரிக்க பெண்களின் கவர்ச்சியை மூலதனமாக்கி அதில் மூழ்கிக்கிடப்பவர்கள் போல் ஆலயங்களின் உரிமையாளர்களும், அறங்காவலர்களும் செயற்படுவது ஆரோக்கியமானதல்ல.

இந்தத் தகவலை எனக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தவர் வேறுயாருமல்ல, கிழக்கு லண்டனில் உள்ள லண்டன் சைவத்திருக்கோயில்கள் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஆலயத்துடன் நெருக்கமான ஒருவரே. அவர் இதுபற்றித் தெரிவிக்கையில் “இவனுகள் எல்லாம் கோயில் நடத்தினால், சைவம் எப்படி உருப்படும் ?” என்றார். “இவனுகள் ஊரிலும் போய் நிம்மதியாய் இருக்கின்ற சமூகங்களை வெட்டுக்குத்தில தான் இறக்குவான்கள்” என்றும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் பாரம் தூக்கும் போட்டியில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் சேலைகட்டி வந்து பாரம் தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார். உடலில் இரத்தம் கசியுமளவுக்கு காயம் ஏற்படுத்தக்கூடாது என்றாலும் லண்டனிலும் பறவைக்காவடி எடுக்கின்றோம். இவற்றை மற்றய இனத்தவர், மதத்தவர் கொச்சைப்படுத்துவது சரியா?

அதுமட்டுமல்ல, ஒரு இளம் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தார் என்று நிரூபிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவன் நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார். மேலும் தனக்கு பிடிக்காதவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களின் படத்தை கொச்சைத்தனமாக எழுதி பொதுத்தளங்களில் பரப்பி வருகின்றார்.

நீண்டகாலமாகவே இஸ்லாமிய விரோதக் கருத்துக்களை வெளியிட்டுவரும் ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளரான இவர் இறுதி யுத்தத்திற்குப் பின் மோடியின் கோசலம் பருகி பிஜேபி க்கு விசுவாசியாகியுள்ளார். இறுதி யுத்தத்திற்கு முன் ஈழபதீஸ்வரர் கோயிலை தங்களிடமிருந்து பறித்தார் என்ற குற்றச்சாட்டில் புலிகளால் வன்னியில் தடுத்து வைக்கப்பட்டார். அப்போது இவரை விடுதலை செய்யக் கோரி இவரது முஸ்லீம் நண்பர்கள் ரிபிசி வானொலியூடாகவும் ஏனைய ஊடகங்களுடாகவும் குரல் எழுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட பதிவை நீக்குமாறூம் பெண்களது படங்களை கொச்சைப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிடுவததை நீக்குமாறும் அதே சமூகவலைத் தளத்திலேயே ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் ஆர் ஜெயதேவனுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை தேசம் ஜெயபாலன் விடுத்திருந்தார். அதனைக் கீழே பதிவு செய்துள்ளேன். ஆனால் எனது குற்றச்சாட்டுகள் தனக்கு எதிராகவும் ஈழபதீஸ்வரர் ஆலயத்துக்கும் சைவ ஆலயங்களுக்கும் எதிராகவும் நான் தொடர்ந்து மேற்கொள்ளும் பழிசுமத்தல்களே என்று ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளர் தேசம் ஜெயபாலன் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

இதே போன்றதொரு மதவிரோதக் கருத்து, இதே சமூகவலைத்தளத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இவ்வாறான பதிவுகளை நீக்குமாறு நானும் இன்னும் சிலரும் கோரியிருந்தும், எதுவும் ஆகவில்லை. அதனால் “நாய் வாலை நிமித்த முடியாது” என்று கூறி சிலர் அந்த சமூகவலைத்தளத்திலிருந்தே வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

ஈழபதீஸ்வரர் ஆலய உரிமையாளரின் இந்த முஸ்லீம் விரோதச் செயற்பாடுகள் பற்றி பாருக் மொகமட் தெரிவிக்கையில், “மேற்குலகமும் அதன் ஊடகங்களும் முஸ்லீம் விரோதத்தைக் கக்குகின்றன. இதில் ஜெயதேவன் போன்ற மத அடிப்படைவாதிகள், வலதுசாரிகள் மற்றும் இனவாதிகள் முஸ்லீம் விரோதம் பேசுவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல” என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்களின் கலாச்சார விழுமியங்களைப் பாகாக்க வேண்டிய ஆலயங்கள் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் ஜெயதேவன் போன்றவர்கள் ஊடுருவி, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் காட்டிக்கொண்டு, இன ஐக்கியத்தை குலைக்கும் இவ்வாறான செயல்களைச் செய்வது மிகத்தவறானது எனத் தெரிவித்தார்.

ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளர், பெண்களது படங்களை கொச்சையாக எழுதி சமூகவலைத்தளங்களில் பரப்புவது, பெண்களுக்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்களுக்கு வக்காலத்து வாங்கி நற்சான்றிதழ் வழங்குவது, பெண்கள் உடற்பயிற்சியில் என்ன உடை உடுத்த வேண்டும் என்று சொல்வது எல்லாமே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றும் இவர்கள் ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று பல்லின, பல்கலாச்சார, பெண்ணுரிமைகளை மதிக்கின்ற சட்டங்கள் உள்ள நாடுகளுக்குப் போனபோதும் மத அடிப்படைவாதிகளாகவும் இனவாதிகளாகவும் வலதுசாரிகளாகவும் பெண்களுக்கு எதிரானவர்களாகவும் செயற்படுவது ஆச்சரியமாக உள்ளது என்கிறார் வன்னியைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் முன்னாள் போராளியும் பெண்ணியவாதியுமான மரியதாஸ் ஜொய்சிமலர்.

Thesam Jeyabalan’s letter to Mr R Jeyadevan:

Dear Mr. Jeyadevan (Jey),

I am writing to you urgently about concerns that have recently surfaced regarding certain comments and content attributed to you on various public platforms, including WhatsApp and social media.

It has come to my attention that the video you shared today and the comments made are being perceived as Islamophobic and misogynistic. Additionally, there are concerns about the use of female family members in addressing issues with individuals, particularly when it involves making misogynistic comments and sharing their photos. The video also shows Muslim women exercising in a gym with their traditional clothing, and your comment referring to it as ‘halal gym’ has raised concerns.

Such actions and comments are not aligned with the principles of unity and respect that are crucial in our diverse communities.

Furthermore, there are claims that you provided a character certificate to an individual who was found guilty of abusing a young girl. This has raised questions about the values upheld by the Eelapatheeswarar Temple and the Association of London Saiva Temples, of which you are a trustee.

As a trustee responsible for running these esteemed institutions, it is imperative to ensure that our actions and words align with the values of inclusivity, tolerance, and harmony. Saivam, as a belief system, encourages understanding and compassion rather than promoting hatred.

I kindly request that you review and consider removing any content that may be perceived as Islamophobic and misogynistic. Such comments have the potential to harm the reputation of the institutions you represent and may create divisions within the community.

Addressing these concerns in a transparent and respectful manner will contribute to fostering a more inclusive and harmonious environment. I appreciate your prompt attention to this matter and trust that you will take the necessary steps to maintain the positive reputation of the Eelapatheeswarar Temple and the Association of London Saiva Temples.

Thank you for your understanding and cooperation.

Sincerely,
T. Jeyabalan

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *