சமூக வலைத்தளங்களில் ஆண்கள் ஏன் பெண்களை துஸ்பிரயோகம் செய்கின்றனர் ?

அண்மைய காலங்களில் சமூக வலைத்தளங்களில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்து கொண்டே செல்வதை அவதானிக்க முடிகின்றது. அதிலும் தமிழர்களின் சமூக வலைத்தள கணக்குகளில் சமூக பொறுப்பு கலாச்சார காவல் போன்ற சொல்லாடல்களை மையப்படுத்தி பெண்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதையும் காண முடிகிறது. இந்த நிலையில் பெண்களின் சமூக நிலை குறித்தும் – சமூக வலைத்தளங்களில் அவர்கள் மீது எவ்வாறான துஷ்பிரயோகங்கள் நடைபெறுகின்றன என்பது பற்றியும் – இது தொடர்பான சிக்கல்களை கையாள்வது பற்றியும் சமூக செயற்பாட்டாளரான நளினி ரத்னராஜா அவர்களுடன் தேசம் நெட் தம்பிராஜா ஜெயபாலன் மேற்கொண்ட கலந்துரையாடல்.

கீழுள்ள இணைப்பை அழுத்தி, ரரின் கொன்ஸ்ரன்ரைன் என்பவரும் லண்டன் வெம்பிளியில் உள்ள ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளரும் இறுதியுத்தத்திற்குப் பின் அரசியல் தஞ்சம் பெற்ற ஒரு பெண்ணை தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தவர் எனக் குற்றம்சாட்டி இலங்கைப் புலனாய்வுப் பிரிவுக்குத் தகவல் கொடுக்கின்றார்களாம். இவர்கள் இதனைத் தமிழீழத் தேசியத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரனின் மகனை லண்டனில் பராமரிப்பவரின் வட்ஸ்அப் குறூபில் தான் செய்துள்ளனர்.

Constantine_T_LTTE_Harasment_01

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *