நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை பயன்படுத்தும் இலங்கையின் 5 லட்சம் மக்கள்!

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நச்சுத்தன்மை வாய்ந்த போதைப்பொருட்களை பயன்படுத்துவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

 

இன்று (3) புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார இதனை தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

இலங்கையில் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு வகையான போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனர். இது தவிர, புதிய வகையான போதை மாத்திரைகளும் சமூகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் இவ்வாறான போதை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.

 

இந்நிலையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் 25 வகையான இரசாயனப் பொருட்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் அவற்றினால் புதிய வகையான போதை மாத்திரைகளை தயாரிக்க முடியும். எனவே இந்த இரசாயனப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதற்கு தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அனமதி அவசியம் என்றார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *