நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதலாவது மனு நீதிமன்றத்தின் முன் தாக்கல் !

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதலாவது மனு நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனகரத்நாயக்கவிற்கு எதிராக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினர் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்கவேண்டும் என்ற நிபந்தனை உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

இந்த மனுவை தாக்கல் செய்திருந்த ஜனகரத்நாயக்க மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தனிப்பட்ட விபரங்களை இணையவழிமூலம் பரிமாறிக்கொள்கின்றனர் அல்லது பரிமாற முயல்கின்றனர் என குறிப்பிட்டிருந்தார்

 

நான் இலக்குவைக்கப்பட்டுள்ளேன் மேலும் மனுவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நபர் வேண்டுமென்றே பிழையான தகவல்களை பரப்புவதன் மூலம் என்னை துன்புறுத்துகின்றார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *