தமிழ் மக்கள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் – பின்னணியில் ராஜபக்சக்கள் என்கிறார் சுமந்திரன்!

தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் நடவடிக்கையின் பின்புலத்தில் ராஜபக்ஷக்கள் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் சந்தேகம் வெளியிட்டள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக கட்சியாக விரைவில் ஒரு தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

குறிப்பாக, தற்போது அரசியல் ரீதியாக தோற்றுப்போயுள்ள ராஜபக்ச தரப்பினர் இதன் பின்னணியில் செயற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

 

ராஜபக்ஷக்கள் கடந்த காலத்தில் தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை தங்களுடைய தேர்தல் வெற்றிக்கானதொரு யுக்தியாகக் கையாண்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *