மே தின கூட்டங்களுக்காக மக்களை திரட்ட சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடும் இலங்கை கட்சிகள் !

பிரதான அரசியல் கட்சிகள் தமது அதிகாரத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் மே தினக் கூட்டங்களில் அதிகம் மக்களை பங்குபற்ற செய்வதற்காக சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளதாக கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

எதிர்வரும் தேர்தல்களை இலக்காகக் கொண்டு, பிரதான அரசியல் கட்சிகள், மே தினக் கூட்டங்கள் மூலம் தமது அதிகபட்ச அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் வகையில், மே தினத்தில் இவ்வளவு பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மே பேரணிகளில் பங்கேற்கும் தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு பயண வசதி செய்து கொடுக்கவும், அவர்களுக்கு உணவு வழங்கவும் பேருந்துகளுக்கும் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படும்.

இந்தத் தொகையுடன், மே பேரணி நடைபெறும் இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள், கட்-அவுட் அலங்காரங்கள், மேடைகள், ஒலிபெருக்கிகள் அமைக்க பல இலட்சம் செலவை அரசியல் கட்சிகள் மேற்கொள்ளவுள்ள

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் கொழும்புக்கு வரவுள்ளன.

மேல் மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்கு ஒரு பேருந்துக்கு 30,000 முதல் 35,000 ரூபாய் வரையிலும், அனுராதபுரம் போன்ற தொலைதூரப் பகுதிகளில் இருந்து கொழும்பு வரும் பேருந்துக்கு 1,50,000 ரூபாய் வரையிலும் கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவருக்கு மதிய உணவுக்கு 300 முதல் 450 ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது

இதற்கு முக்கிய அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்படும் பணம் போதாது என்பதால், தொகுதி அமைப்பாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் பணம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *