இலங்கையில் 600,000 பாடசாலை மாணவர்கள் காலை உணவின்றி பாடசாலைகளுக்கு செல்கின்றனர்!

நாட்டில் 600,000 பாடசாலை மாணவர்கள் காலை உணவின்றி பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான பாராளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, பாடசாலைக்கு குழந்தைகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும் குழுவில் தகவல் வெளியானது. வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான குழு, ஆரம்பப் பாடசாலைக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு தெரிவித்தது.

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்காக ஆண்டுக்கு 1600 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவிகளை வழங்க விரும்பும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு முறையான முறைமை ஒன்றைத் தயாரிக்கவும் குழு ஆலோசனை வழங்கியது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *