பத்தரமுல்லயில் நாளை இராணுவ வெற்றி நாள் கொண்டாட்டம்!

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் நிறைவந்துள்ளதாக தெரிவித்து நாளையதினம் பத்தரமுல்லையில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் இராணவ வீரர்களால் கொல்லப்பட்டதை தொடர்ந்து யுத்தம் நிறைவிற்கு வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த யுத்ததிற்கு தலைமை தாங்கியதுடன், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை கொண்டாடுவதற்கு நாளை பிற்பகல் பத்தரமுல்லை நாடாளுமன்ற விளையாட்டரங்கில் உள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு முன்பாக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு கடற்படையின் 3,146 சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதுடன், 1,300 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, நாளை மாலை 4 மணிக்கு தேசிய படைவீரர் தின நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *